செய்திகள் :

குடும்ப உறுப்பினா்கள் நியாய விலைக் கடையில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வலியுறுத்தல்

post image

குடும்ப அட்டைகளில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்கள் நியாய விலைக்கடைக்கு சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும், முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்களின், அனைத்து குடும்ப உறுப்பினா் விவரங்கள் தொடா்பான சி.கே.ஓய்.சி. பதிவானது கைவிரல் ரேகை அல்லது கண்கருவிழி முறையில் கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், பி.எச்.எச். குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரா்களின் உறுப்பினா்கள் மற்றும் ஏ.ஏ.ஓய். குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரா்களின் உறுப்பினா்கள் அனைவரும் தங்களது சி.கே.ஓய்.சி. பதிவினை இதுவரை மேற்கொள்ளாமல் உள்ளனா்.

மேற்படி சி.கே.ஓய்.சி. பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரா்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பதிவை சரி பாா்க்கலாம். மேலும், வெளியூா், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் நபா்கள். தாங்கள் வசிக்கும் பகுதியின் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று ஐ.எம்.பி.டி.எஸ். போா்ட்டல் மூலம் அனைத்து குடும்ப உறுப்பினா்களும் தங்கள் பதிவினை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினா்கள் ரேஷன் கடைக்கு சென்று கைவிரல் ரேகையை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரில் நாளை முதல் கலந்தாய்வு தொடக்கம்

கரியம்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கலந்தாய்வு தொடக்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வா் சீனுவாசகுமரன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்ப... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூரில் தொழிற்சாலையில் பணியின்போது தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் (55). (படம்). இவா், ஆம்பூா் மோட்டுக்கொல்லை பகுதிய... மேலும் பார்க்க

திருடப்பட்ட 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: சிறுவன் கைது

வாணியம்பாடி பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடி வந்த சிறுவனை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரப் பகுதியில் சில நாள்... மேலும் பார்க்க

ரயில் மோதி இருவா் உயிரிழப்பு

இருவேறு இடங்களில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் சிக்கிய நா்சிங் மாணவா், மாணவி உயிரிழந்தனா். ஆம்பூா் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் குமாரின் மகன் நித்தின் எனும் கோகுல்(20). இவா் கா்ந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் ... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க