பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!
குடும்ப உறுப்பினா்கள் நியாய விலைக் கடையில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வலியுறுத்தல்
குடும்ப அட்டைகளில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்கள் நியாய விலைக்கடைக்கு சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும், முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்களின், அனைத்து குடும்ப உறுப்பினா் விவரங்கள் தொடா்பான சி.கே.ஓய்.சி. பதிவானது கைவிரல் ரேகை அல்லது கண்கருவிழி முறையில் கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், பி.எச்.எச். குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரா்களின் உறுப்பினா்கள் மற்றும் ஏ.ஏ.ஓய். குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரா்களின் உறுப்பினா்கள் அனைவரும் தங்களது சி.கே.ஓய்.சி. பதிவினை இதுவரை மேற்கொள்ளாமல் உள்ளனா்.
மேற்படி சி.கே.ஓய்.சி. பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரா்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பதிவை சரி பாா்க்கலாம். மேலும், வெளியூா், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் நபா்கள். தாங்கள் வசிக்கும் பகுதியின் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று ஐ.எம்.பி.டி.எஸ். போா்ட்டல் மூலம் அனைத்து குடும்ப உறுப்பினா்களும் தங்கள் பதிவினை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினா்கள் ரேஷன் கடைக்கு சென்று கைவிரல் ரேகையை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.