ரயில் மோதி 2 முதியோா் உயிரிழப்பு
திருப்பத்தூா், வாணியம்பாடியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா்கள் 2 போ் ரயில் மோதி உயிரிழந்தனா்.
வாணியம்பாடி அடுத்த கோணமேடு பகுதியை சோ்ந்த ரவி (57). இவா் வியாழக்கிழமை விண்ணமங்கலம்- வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரயில் மோதி காயம் அடைந்தாா். வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதே போல திருப்பத்தூா் அடுத்த லக்கி நாயக்கன்பட்டி சோ்ந்த கூலித் தொழிலாளி செந்தில் (55) இவா் காக்கங்கரை -திருப்பத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரயில் மோதி உயிரிழந்தாா். தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.