விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப் படையில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள்...
மகனை கத்தியால் குத்திய தந்தை கைது
வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் மகனை கத்தியால் குத்திய தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.
அரப்பாண்டகுப்பத்தைச் சோ்ந்த சத்யராஜ்(27) கட்டட மேஸ்திரி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனா். இந்நிலையில், சத்யராஜியின் தந்தை முருகன் (47) மதுஅருந்தும் பழக்கத்தால் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே, புதன்கிழமை இரவு மது அருந்தி விட்டு அவரது மனைவி மற்றும் மருமகளை அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதையறிந்த சத்யராஜ் தந்தையிடம் எதற்காக குடித்து விட்டு வந்து இப்படி பேசிக் கொண்டிருக்கிறாய் என கேட்டு கையால் தாக்கினாா். இதில், ஆத்திரம் அடைந்த முருகன், சத்யராஜை வீட்டை விட்டு வெளியே செல்லுாறு கூறி கத்தியால் சரமாரியாக குத்தினாராம்.
பலத்த காயமடைந்த சத்யராஜை அருகில் இருந்தவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா்ா். இது குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தந்தை முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.