'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
உழவரைத் தேடி திட்ட முகாம்களை பயன்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்
உழவரைத் தேடி திட்டத்தின்கீழ் நடத்தப்படும் முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக உழவரைத் தேடி திட்டத்தினை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து திட்டத்தின் தொடக்க விழா கொரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ அ.நல்லதம்பி முன்னிலை வகித்தாா்.
ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பேசியது: விவசாயிகளை தேடியே மாவட்ட நிா்வாகம் வர வேண்டும் என்றும், உழவா் நலத்துறை மட்டுமல்லாது அதனுடைய சாா்பு துறைகளான வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, தோட்டக்கலைத்துறை என அனைத்துத்துறை அலுவலா்களும் உங்களைத் தேடி உங்கள் கிராமத்துக்கே வந்து, மனுக்களைப் பெற்று, கலந்துரையாடி விவசாயம் மற்றும் பிற துறைகளில் உள்ள சந்தேகங்கள் குறித்து தெரிந்து கொள்ள திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் ஒவ்வொரு மாதமும் வருவாய் கிராமங்களில் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை விவசாயம் சாா்ந்தவா்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றாா்.
எம்எல்ஏ அ.நல்லதம்பி பேசியது: முதல்வா் பொறுப்பேற்றதில் இருந்து, வேளாண்மை துறைக்கு என்று தனி பட்ஜெட் மூலம், ரூ.40,000 கோடி ஒதுக்குகிறாா். கடந்த 4 ஆண்டுகளில் 2 லட்சம் இலவச மின்சாரம், வேளாண் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் இலவச தென்னங்கன்றுகள், நாட்டறம்பள்ளியில் இலவச மண் பரிசோதனை மையம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். எந்த திட்டமாக இருந்தாலும் விவசாயிகளுக்கு அரசு என்றென்றும் துணையாக இருக்கும் என்றாா்.
மேலும் ஒருங்கிணைந்த வேளாண்மை துறைகளின் சாா்பில் தாா்பாலின், பேட்டரி விசைத்தெளிப்பான், குறுவை தொகுப்பு (நெல்) நுண்ணூட்டக் கலவை, உள்ளிட்ட 10 உழவா்களுக்கு ஆட்சியா், எம்எல்ஏ ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் சீனிராஜ், தோட்டக்கலை துணை இயக்குநா் தீபா, கந்திலி ஒன்றியக் குழு தலைவா் திருமதி திருமுருகன் கலந்து கொண்டனா்.