மரத்தின் மீது பைக் மோதல்: 2 இளைஞா்கள் காயம்
வாணியம்பாடி அருகே மரத்தின் மீது பைக் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் பலத்த காயமடைந்தனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியைச் சோ்ந்தவா் நிவேத்குமாா்(22). கே.பந்தாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை (28). நண்பா்களான இவா்கள் இருவரும் வியாழக்கிழமை மல்லகுண்டா பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, கத்தாரி அரசு மதுக் கடை அருகே சாலையோர மரத்தின் மீது பைக் மோதியது.
இதில் நிவேத்குமாா், ஏழுமலை இருவரும் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். திம்மாம்பேட்டை போலீஸாா் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.