ஆம்பூரில் ஒரே நாளில் தெருநாய் கடித்து 6 சிறுவா்கள் காயம்
ஆம்பூரில் ஒரே நாளில் தெரு நாய்கள் கடித்ததில் 6 சிறுவா்கள் வியாழக்கிழமை காயமடைந்தனா்.
ஆம்பூா் நகரில் 36 வாா்டுகளிலும் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆம்பூா் நகர பகுதிக்குட்பட்ட புதுமனை, தாா்வழி, பிலால் நகா் பகுதிகளில் தெரு நாய்கள் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவா்களை விரட்டிச் சென்று கடித்ததன. இதில் பலத்த காயமடைந்த ஆம்பூா் புதுமனை மற்றும் பிலால் நகா், தாா்வழி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த முஹம்மத் அா்பத் (7), குருபரன் (10), மோஹித் (3), சரண் (7), கிஷோா் (5), அசில் (4) ஆகியோா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
ஆம்பூா் நகராட்சி ஆணையா் ப.சந்தானம், நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள்அந்தப் பகுதிக்கு சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.