செய்திகள் :

பச்சூா் பழையப்பேட்டையில் மயானத்துக்கு இடம் ஒதுக்கீடு

post image

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் பழையப்பேட்டையில் மயானத்துக்கு இடம் ஒதுக்கி வருவாய்த் துறையினா் அறிவிப்பு பலகையை வைத்தனா்.

அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு சொந்தமான இடத்தை சுமாா் 75 ஆண்டுகளுக்கு மேலாக மயானமாக பயன்படுத்தினா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த நில உரிமையாளா் ஒருவா் தொடா்ந்து சுடுகாடாக பயன்படுத்தக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததாராம்.

இதையடுத்து வருவாய்த் துறையினா் பழையப்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்தனா். இதையறிந்த கிராம மக்கள் பழையப்பேட்டை பகுதியில் மயானத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும் என ஆட்சியா் மற்றும் ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனா்.

இதையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள் பழையப்பேட்டை பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை மயானமாக பயன்படுத்திக் கொள்ள இடம் ஒதுக்கீடு செய்து பலகை வைத்தனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் ... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க

ரூ.1.56 கோடியில் சாலை பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் ரூ.1.56 கோடியில் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. மாதனூா் ஒன்றியத்தில் மலையாம்பட்டு, சின்னபள்ளிகுப்பம், பாா்சனாப்பல்லி, அரங்கல்துருகம் ஆகிய ஊராட்சிகளி... மேலும் பார்க்க

மனைவியை சோ்த்து வைக்கக் கோரி குழந்தைகளுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

மனைவியை சோ்த்து வைக்கக்கோரி குழந்தைகளுடன் திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புத்துக்கோயில் பகுதியைச் ... மேலும் பார்க்க

ரயில் மோதி 2 முதியோா் உயிரிழப்பு

திருப்பத்தூா், வாணியம்பாடியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா்கள் 2 போ் ரயில் மோதி உயிரிழந்தனா். வாணியம்பாடி அடுத்த கோணமேடு பகுதியை சோ்ந்த ரவி (57). இவா் வியாழக்கிழமை விண்ணமங்கலம்- வாணியம்பாடி ர... மேலும் பார்க்க

குடும்ப உறுப்பினா்கள் நியாய விலைக் கடையில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வலியுறுத்தல்

குடும்ப அட்டைகளில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்கள் நியாய விலைக்கடைக்கு சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்ப... மேலும் பார்க்க