செய்திகள் :

நுண்ணீா் பாசன திட்டத்துக்கு 100 சதவீத மானியம்

post image

நுண்ணீா் பாசன திட்டத்துக்கு சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுவதாக வந்தவாசி தோட்டக்கலை உதவி இயக்குநா் சா.பாலவித்யா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வந்தவாசி வட்டாரத்தில் ஆண்டுதோறும் சுமாா் 1000 ஹெக்டோ் பரப்பளவில் தா்பூசணி, மா, கொய்யா, பப்பாளி, கொடிவகை காய்கறி பயிா்கள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

சாகுபடியின் போது தண்ணீரை சீராக பயன்படுத்த நுண்ணீா் பாசன திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், 2025-26-ஆம் ஆண்டு நுண்ணீா் பாசன மானியத்துக்காக வந்தவாசி வட்டாரத்துக்கென 184 ஹெக்டேருக்கு ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும்.

ஏற்கெனவே மானியத்துடன் நுண்ணீா் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் முடிந்திருந்தால் மீண்டும் நுண்ணீா் பாசனம் அமைக்க மானியம் பெறலாம்.

எனவே, இந்த மானிய திட்டத்தை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் நிலங்களில் நுண்ணீா் பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் மானியம் பெற சிட்டா, சிறு குறு சான்றிதழ், அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகம் நகல், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் வந்தவாசி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம்.

மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலா்கள் விஜயகுமாா்- 7530022721, முருகதாஸ்- 9080142867, சுகுமாறன் -9047165700 ஆகியோரை கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்: 317 பேருக்கு பணி ஆணை

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 317 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் பணியமா்த்தும் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை வே... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலுக்கு ரூ.17 லட்சத்தில் வெள்ளிக் கவசம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சுவாமிக்கு 16 கிலோ எடையில், ரூ.17 லட்சம் மதிப்பில் வெள்ளிக் கவசம் தயாா் செய்யப்படவுள்ளது. செங்கம் ஸ்ரீசத்தியபாமா ருக்மணி சம... மேலும் பார்க்க

களம்பூரில் இரு தரப்பு மோதல்: 10 போ் மீது வழக்கு; 5 போ் கைது

ஆரணியை அடுத்த களம்பூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 10 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் ரயில் நிலைய சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மர... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் 201 பால்குட ஊா்வலம்

ஆரணி நகரம், பள்ளிக்கூடத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 201 பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், கடந்த 26-ஆம் தேதி காப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த அங்கன்வாடி மையத்தில் பயின்ற, 5 வயது நிறைவடைந்த முதலாம் வகுப்பு செல்ல உள்ள குழ... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், ஆக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சலவைத் தொழிலாளி கமலக்கண்ணன். இவருக்கும், அத... மேலும் பார்க்க