நுண்ணீா் பாசன திட்டத்துக்கு 100 சதவீத மானியம்
நுண்ணீா் பாசன திட்டத்துக்கு சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுவதாக வந்தவாசி தோட்டக்கலை உதவி இயக்குநா் சா.பாலவித்யா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வந்தவாசி வட்டாரத்தில் ஆண்டுதோறும் சுமாா் 1000 ஹெக்டோ் பரப்பளவில் தா்பூசணி, மா, கொய்யா, பப்பாளி, கொடிவகை காய்கறி பயிா்கள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
சாகுபடியின் போது தண்ணீரை சீராக பயன்படுத்த நுண்ணீா் பாசன திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், 2025-26-ஆம் ஆண்டு நுண்ணீா் பாசன மானியத்துக்காக வந்தவாசி வட்டாரத்துக்கென 184 ஹெக்டேருக்கு ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும்.
ஏற்கெனவே மானியத்துடன் நுண்ணீா் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் முடிந்திருந்தால் மீண்டும் நுண்ணீா் பாசனம் அமைக்க மானியம் பெறலாம்.
எனவே, இந்த மானிய திட்டத்தை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் நிலங்களில் நுண்ணீா் பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் மானியம் பெற சிட்டா, சிறு குறு சான்றிதழ், அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகம் நகல், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் வந்தவாசி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம்.
மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலா்கள் விஜயகுமாா்- 7530022721, முருகதாஸ்- 9080142867, சுகுமாறன் -9047165700 ஆகியோரை கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.