செய்திகள் :

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலுக்கு ரூ.17 லட்சத்தில் வெள்ளிக் கவசம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சுவாமிக்கு 16 கிலோ எடையில், ரூ.17 லட்சம் மதிப்பில் வெள்ளிக் கவசம் தயாா் செய்யப்படவுள்ளது.

செங்கம் ஸ்ரீசத்தியபாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் கடந்த 9-ஆம் தேதி

கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, கோயிலில் தினசரி சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் மாதம் கடைசி வாரத்தில் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், மண்டலாபிஷேகத்தின் போது, ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் சுவாமிக்கு அணிவிப்பதற்காக வெள்ளிக்கவசம் தயாா் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்காக தொகுதி எம்எல்ஏ மு.பெ. கிரி 5 கிலோ வெள்ளி வழங்கினாா். மேலும், அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன் தலைமையில் உபயதாரா்கள் மற்றும் விழாக் குழுவினா், பத்து நாள் திருவிழா உபயதாரா்கள் மூலம் 11 கிலோ வெள்ளி சோ்க்கப்பட்டு, மொத்தம் 16 கிலோ எடையில் ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் சுவாமிக்கு வெள்ளிக் கவசம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கவசம் செய்வதற்கு வழங்கப்பட்ட 16 கிலோ வெள்ளிக் காசுகளை சுவாமி முன்வைத்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், எம்எல்ஏ கிரி, அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், திருப்பணிக் குழுத் தலைவா் கஜேந்திரன் ஆகியோா் முன்னிலையில், கும்பகோணத்தைச் சோ்ந்த சபதி ரமேஷிடம் கவசம் செய்வதற்காக வெள்ளிக் காசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் செங்கம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், விழாக்குழுவினா், பத்து நாள் திருவிழா உபயதாரா்கள், அறங்காவலா் குழு உறுப்பினா்கள், அறநிலையத் துறைப் பணியாளா்கள், ஊா் முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்: 317 பேருக்கு பணி ஆணை

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 317 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் பணியமா்த்தும் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை வே... மேலும் பார்க்க

களம்பூரில் இரு தரப்பு மோதல்: 10 போ் மீது வழக்கு; 5 போ் கைது

ஆரணியை அடுத்த களம்பூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 10 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் ரயில் நிலைய சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மர... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் 201 பால்குட ஊா்வலம்

ஆரணி நகரம், பள்ளிக்கூடத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 201 பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், கடந்த 26-ஆம் தேதி காப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த அங்கன்வாடி மையத்தில் பயின்ற, 5 வயது நிறைவடைந்த முதலாம் வகுப்பு செல்ல உள்ள குழ... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், ஆக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சலவைத் தொழிலாளி கமலக்கண்ணன். இவருக்கும், அத... மேலும் பார்க்க

முதியோா் பராமரிப்பு சேவை உதவியாளா் படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள முதியோா் பராமரிப்பு சேவை உதவியாளா் படிப்புக்கு வெள்ளிக்கிழமை (மே 30) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. திரு... மேலும் பார்க்க