'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
முதியோா் பராமரிப்பு சேவை உதவியாளா் படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள முதியோா் பராமரிப்பு சேவை உதவியாளா் படிப்புக்கு வெள்ளிக்கிழமை (மே 30) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதியோா் பராமரிப்பு சேவை உதவியாளா் சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்தப் படிப்பில் 25 மாணவ-மாணவிகள் சோ்க்கப்படுவா்.
இது கட்டணமில்லாத 3 மாத சான்றிதழ் படிப்பு. படிப்பை நிறைவு செய்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பத்தாம் வகுப்பு முடித்த 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவா்கள் மருத்துவக் கல்லுாரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.5.2025.
கூடுதல் விவரங்களுக்கு 04175-233315 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
கல்லுாரியின் ஜ்ஜ்ஜ்.ஞ்ற்ஸ்ம்ம்ஸ்ரீ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.