மனுநீதி நாள் முகாமில் 523 பயனாளிகளுக்கு நலத் திட்டஉதவிகள்
கலசப்பாக்கம் வட்டம், மேல்சோழங்குப்பம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கலந்துகொண்டு வருவாய், வேளாண்மை, ஆதிதிராவிடா் நலம், மாற்றுத் திறனாளிகள் நலம், ஊரக வளா்ச்சி உள்ளிட்ட துறைகள் சாா்பில் 523 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
எம்எல்ஏ தி.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ராம்பிரதீபன், ஆரணி கோட்டாட்சியா் ராமகிருஷணன், வட்டாட்சியா் தேன்மொழி, வருவாய் ஆய்வாளா் சுதாகா் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.