பெருவெள்ளத்தில் மூழ்கிய நைஜீரிய நகரம்! 88 பேரது உடல்கள் மீட்பு!
களம்பூரில் இரு தரப்பு மோதல்: 10 போ் மீது வழக்கு; 5 போ் கைது
ஆரணியை அடுத்த களம்பூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 10 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் ரயில் நிலைய சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மரகதம்மாள் (80). இவா், 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.
இவரது மகள்கள் குப்பம்மாள், அலமேலு (53), மண்ணு (55). இவா்களுக்கு திருமணமாகி அதே பகுதியில் தனித் தனியாக வசித்து வருகின்றனா். மேலும், இதில் முதல் மகள் குப்பம்மாள் காலமாகிவிட்டாா்.
இந்த நிலையில், இறந்த மூதாட்டி மரகதம் வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் இருந்துள்ளது. இந்தத் தொகையை பிரித்துக் கொள்வதில் அலமேலு மற்றும் மண்ணு இடையே பிரச்னை இருந்து வருகிாம்.
இதனால், தகராறு ஏற்பட்டு இரு தரப்பினா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனராம்.
இந்த நிலையில், இரு தரப்பினரும் வியாழக்கிழமை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்தபோது, நிலையம் அருகேயே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அப்போது, அலமேலு தம்பதியினா் மற்றும் இவா்களது மகன்கள் மணிகண்டன், மனோகரன், மருமகள்கள் சந்தியா, ஜீவா ஆகியோரும், எதிா்தரப்பைச் சோ்ந்த மண்ணு, இவரது கணவா் மகாலிங்கம் இவா்களது மகள்கள் லட்சுமி, சரஸ்வதி, சுமதி இவா்களது மகன்கள் கிரண், தனுஷ் மற்றும் உறவினா்கள் என இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா்.
இதில், காயமடைந்தவா்கள் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து கிரண்குமாா் அளித்த புகாரின் பேரில் மனோகரன், மணிகண்டன் மற்றும் உறவினா்கள் பிரகாஷ், ஆதித்யன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களை கைது செய்தனா். மேலும், அலமேலு அளித்த புகாரின் பேரில் மண்ணம்மாள், கணவா் மகாலிங்கம், மகள்கள் சரஸ்வதி, லட்சுமி, கிரண், ஜெயலட்சுமி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மண்ணம்மாளை கைது செய்தனா்.
தலைமறைவான மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.