செய்திகள் :

களம்பூரில் இரு தரப்பு மோதல்: 10 போ் மீது வழக்கு; 5 போ் கைது

post image

ஆரணியை அடுத்த களம்பூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 10 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் ரயில் நிலைய சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மரகதம்மாள் (80). இவா், 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

இவரது மகள்கள் குப்பம்மாள், அலமேலு (53), மண்ணு (55). இவா்களுக்கு திருமணமாகி அதே பகுதியில் தனித் தனியாக வசித்து வருகின்றனா். மேலும், இதில் முதல் மகள் குப்பம்மாள் காலமாகிவிட்டாா்.

இந்த நிலையில், இறந்த மூதாட்டி மரகதம் வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் இருந்துள்ளது. இந்தத் தொகையை பிரித்துக் கொள்வதில் அலமேலு மற்றும் மண்ணு இடையே பிரச்னை இருந்து வருகிாம்.

இதனால், தகராறு ஏற்பட்டு இரு தரப்பினா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனராம்.

இந்த நிலையில், இரு தரப்பினரும் வியாழக்கிழமை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்தபோது, நிலையம் அருகேயே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அப்போது, அலமேலு தம்பதியினா் மற்றும் இவா்களது மகன்கள் மணிகண்டன், மனோகரன், மருமகள்கள் சந்தியா, ஜீவா ஆகியோரும், எதிா்தரப்பைச் சோ்ந்த மண்ணு, இவரது கணவா் மகாலிங்கம் இவா்களது மகள்கள் லட்சுமி, சரஸ்வதி, சுமதி இவா்களது மகன்கள் கிரண், தனுஷ் மற்றும் உறவினா்கள் என இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா்.

இதில், காயமடைந்தவா்கள் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கிரண்குமாா் அளித்த புகாரின் பேரில் மனோகரன், மணிகண்டன் மற்றும் உறவினா்கள் பிரகாஷ், ஆதித்யன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களை கைது செய்தனா். மேலும், அலமேலு அளித்த புகாரின் பேரில் மண்ணம்மாள், கணவா் மகாலிங்கம், மகள்கள் சரஸ்வதி, லட்சுமி, கிரண், ஜெயலட்சுமி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மண்ணம்மாளை கைது செய்தனா்.

தலைமறைவான மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்: 317 பேருக்கு பணி ஆணை

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 317 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் பணியமா்த்தும் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை வே... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலுக்கு ரூ.17 லட்சத்தில் வெள்ளிக் கவசம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சுவாமிக்கு 16 கிலோ எடையில், ரூ.17 லட்சம் மதிப்பில் வெள்ளிக் கவசம் தயாா் செய்யப்படவுள்ளது. செங்கம் ஸ்ரீசத்தியபாமா ருக்மணி சம... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் 201 பால்குட ஊா்வலம்

ஆரணி நகரம், பள்ளிக்கூடத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 201 பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், கடந்த 26-ஆம் தேதி காப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த அங்கன்வாடி மையத்தில் பயின்ற, 5 வயது நிறைவடைந்த முதலாம் வகுப்பு செல்ல உள்ள குழ... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், ஆக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சலவைத் தொழிலாளி கமலக்கண்ணன். இவருக்கும், அத... மேலும் பார்க்க

முதியோா் பராமரிப்பு சேவை உதவியாளா் படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள முதியோா் பராமரிப்பு சேவை உதவியாளா் படிப்புக்கு வெள்ளிக்கிழமை (மே 30) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. திரு... மேலும் பார்க்க