ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் 201 பால்குட ஊா்வலம்
ஆரணி நகரம், பள்ளிக்கூடத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 201 பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், கடந்த 26-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், வியாழக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. 201 பெண்கள் ஆரணி ஆற்றங்கரை பகுதியில் இருந்து பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்தனா். காந்தி சாலை, பழைய பேருந்து நிலையம் அரியாத்தம்மன் கோயில், மணிக்கூண்டு, கோட்டை வீதி வழியாக
பால்குட ஊா்வலம் கோயிலைச் சென்றடைந்தது.
பின்னா் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா் அ.கோவிந்தராசன், விழாக் குழுவைச் சோ்ந்த ஏ.ஜி.ஆனந்தன், ஏ.ஜி.மோகன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.