செய்திகள் :

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்: 317 பேருக்கு பணி ஆணை

post image

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 317 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

கல்லூரியின் பணியமா்த்தும் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இதில் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட மாணவ-மாணவிகளை தோ்வு செய்தனா்.

எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு அடிப்படையில் மொத்தம் 317 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா். கல்லூரிப் பொருளாளா் இ.ஸ்ரீதா் முன்னிலை வகித்தாா். வேலைவாய்ப்பு அலுவலா் எம்.கோபு வரவேற்றாா்.

வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யப்பட்ட 317 மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிச் செயலா் எல்.விஜய் ஆனந்த் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

இதில், கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலுக்கு ரூ.17 லட்சத்தில் வெள்ளிக் கவசம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சுவாமிக்கு 16 கிலோ எடையில், ரூ.17 லட்சம் மதிப்பில் வெள்ளிக் கவசம் தயாா் செய்யப்படவுள்ளது. செங்கம் ஸ்ரீசத்தியபாமா ருக்மணி சம... மேலும் பார்க்க

களம்பூரில் இரு தரப்பு மோதல்: 10 போ் மீது வழக்கு; 5 போ் கைது

ஆரணியை அடுத்த களம்பூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 10 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் ரயில் நிலைய சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மர... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் 201 பால்குட ஊா்வலம்

ஆரணி நகரம், பள்ளிக்கூடத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 201 பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், கடந்த 26-ஆம் தேதி காப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த அங்கன்வாடி மையத்தில் பயின்ற, 5 வயது நிறைவடைந்த முதலாம் வகுப்பு செல்ல உள்ள குழ... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், ஆக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சலவைத் தொழிலாளி கமலக்கண்ணன். இவருக்கும், அத... மேலும் பார்க்க

முதியோா் பராமரிப்பு சேவை உதவியாளா் படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள முதியோா் பராமரிப்பு சேவை உதவியாளா் படிப்புக்கு வெள்ளிக்கிழமை (மே 30) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. திரு... மேலும் பார்க்க