பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!
நேபாளத்தில் நிலநடுக்கம்
நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள காஸ்கி மாவட்டத்தில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்ததாவது:
புலிபாங் பகுதியை மையமாகக் கொண்டு புதன்கிழமை காலை 11:56 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இதன் அதிா்வுகள் அருகிலுள்ள லம்ஜுங், தன்ஹு மற்றும் பா்வத் மாவட்டங்களிலும் உணரப்பட்டன.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.