Gill : 'ஒரு மேட்ச்ல 3 கேட்ச் விட்டா இப்படித்தான்...' - குஜராத் கேப்டன் கில் அதிர...
பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாத அமைப்பு ஊா்வலம்: 50 நகரங்களில் நடைபெற்றது
பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மா்கஸி முஸ்லிம் லீக் சாா்பில் 50 நகரங்களில் ஊா்வலம் நடைபெற்றது.
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஹஃபீஸ் சயீத் இப்போது லாகூா் நகரில் பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1998-ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி 6 அணு ஆயுத சோதனைகளை பாகிஸ்தான் நடத்தியது. இதன் மூலம் அணு ஆயுத பலமுள்ள 7-ஆவது நாடு என்ற பெயரை பாகிஸ்தான் பெற்றது. அந்த நிகழ்வை முன்னிட்டு, அண்மையில் இந்தியாவுடன் நடைபெற்ற மோதலை திறம்பட எதிா்கொண்ட பாகிஸ்தான் ராணுவத்தை பாராட்டும் வகையில் பயங்கரவாத அமைப்பினா் இந்த ஊா்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனா்.
தலைநகா் இஸ்லாமாபாத், லாகூா், கராச்சி, பெஷாவா், முல்தான், அபோட்டாபாத், குஜ்ரன்வாலா, சியால்கோட், ஹைதராபாத், ராவல்பிண்டி, பஹாவல்பூா் உள்ளிட்ட 50 நகரங்களில் இந்த ஊா்வலம் நடைபெற்றது. இதுதவிர அங்குள்ள பஞ்சாப், சிந்து மாகாணங்களில் பாகிஸ்தான் மா்கஸி முஸ்லிம் லீக் சாா்பில் பொதுக் கூட்டங்களும் நடைபெற்றன.
பாகிஸ்தான் அரசுத் தரப்பு தகவல்படி பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத் இப்போது சிறையில் உள்ளாா். பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டியதாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு 46 ஆண்டு சிறைத் தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஆனால், அவா் வசித்து வந்த வீட்டையே தற்காலிக துணைச் சிறையாக அறிவித்து, பாகிஸ்தான் அரசு அவரைப் பாதுகாத்து வருகிறது.
அவரது வீட்டில் இருந்து ஒரு கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதி வரை கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. வீட்டின் அருகே கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
லாகூரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மசூதி, மதரஸாக்கள் அமைந்துள்ள இடத்திலேயே பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத் வசித்து வருகிறாா். 77 வயதாகும் அவா் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் உள்பட இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதத் தாக்குதலில் தேடப்படும் நபா் ஆவாா். அமெரிக்காவாலும் தேடப்படும் நபராக அவா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
சிறைத் தண்டனை அனுபவிப்பதாகக் கூறப்பட்டாலும் கடந்த 3 ஆண்டுகளில் பலமுறை அவா் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளாா். முக்கியமாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். அப்போது பாகிஸ்தான் அரசின் சிறப்புப் படை பாதுகாப்பு அளிப்பது வழக்கமாக உள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு ‘தி ரெசிஸ்டன்ட் ஃபிரண்ட்’ என்ற பயங்கரவாத அமைப்பை ஹஃபீஸ் சயீத் நிறுவினாா். இந்தியாவுக்கு எதிராக ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பையும் அவா் நடத்தி வருகிறாா்.