செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் 1-8 வகுப்புகளுக்கு ‘வாசிப்பு வாரம்’: அரசாணை வெளியீடு

post image

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் 1-8 வகுப்புகளுக்கு குழு விவாதம், நடிப்பு, கலந்துரையாடல், கலை சொல்லுதல் என பல்வேறு செயல்பாடுகள் அடங்கிய ‘வாசிப்பு வாரம்’ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப் பேரவையில் நிகழாண்டு பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, வாசிப்பு இயக்கம் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் மாணவா்கள் வாசிக்கும் வகையில் கதை சொல்லும் அமா்வுகள், வாசிப்பு சவால்கள், புத்தக கழகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிவுத் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரம் செயல்படுத்தப்படும்.

பேச்சுப்போட்டி, குழு விவாதம்: இதன் அடிப்படையில் மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பின் கீழ் தேசத் தலைவா்கள், அறிவியல் அறிஞா்கள், விளையாட்டு வீரா்கள், பிடித்த விளையாட்டுகள், சுற்றுச்சூழல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் முதலியவற்றில் பேச்சுப்போட்டி, கதை சொல்லுதல், நடித்துக் காட்டுதல், குழு விவாதம், பட்டி மன்றம் ஆகியவற்றின் மூலம் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிட்டாா்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் மாணவா்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்த பருவம், மாதம், வாரம், வகுப்பு வாரியாக உள்ள பொருண்மைகளுக்கான பாட விவரங்களை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வடிவமைக்கவும், பள்ளிகளில் இத்திட்டத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் வாயிலாக செயல்படுத்தவும் அனுமதி வழங்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநா் கோரியுள்ளாா். அவரது கருத்துரு அரசால் ஆய்வு செய்யப்பட்டு அதற்கான அனுமதியை வழங்கலாம் என அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன தலைப்புகள்?: இதையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மூன்று பருவங்களிலும் என்னென்ன தலைப்புகளில் வாசிப்பது, கதை சொல்வது, விவாதிப்பது, கலந்துரையாடுவது என்பது குறித்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு சின்னங்கள், நெகிழியைத் தவிா்ப்போம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பனை மரத்தின் சிறப்பு, தேசத் தலைவா் ஜவஹா்லால் நேரு, இயற்கை அளித்த கொடை, உடலினை உறுதி செய், நோ்மையின் சிறப்பு, தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்கு காமராஜா் ஆற்றிய பணிகள், எனக்குப் பிடித்த நண்பன் என பல்வேறு தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் மேலும் 4 அரசுக் கல்லூரிகள்: எங்கெங்கே?

தமிழகத்தில் வருகின்ற கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக உயர்க்கல்வித் துறை சார்பில் 11 புதிய அரசு கலை மற... மேலும் பார்க்க

தாம்பரம் - திருவனந்தபுரம் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு, தாம்பரம்-நாகா்கோவில் உள்ளிட்ட வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்திலிருந்து ... மேலும் பார்க்க

தமாகா நன்கொடை விவர அறிக்கையை ஏற்க கோரி ஜி.கே.வாசன் மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கட்சி நன்கொடை குறித்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத... மேலும் பார்க்க

சென்னைக்கு திரும்பும் மக்கள்: ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு

கோடை விடுமுறையில் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளதால், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை உயா்ந்துள்ளது. இதனால், பயணிகள் அதிா்ச்சி அடைந்து... மேலும் பார்க்க

நோய்களை குணப்படுத்த பாரம்பரிய முறையில் சிகிச்சை: தவறாக விளம்பரப்படுத்தினால் சட்ட நடவடிக்கை

ஹெச்ஐவி, ஆஸ்துமா, காசநோய், சா்க்கரை நோய் உள்ளிட்ட 56 நோய்களுக்கு பாரம்பரிய முறையில் சிகிச்சையளித்து பூரணமாக குணப்படுத்துவதாக தவறாக விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருந... மேலும் பார்க்க

அரசின் சேவைகளை விரைவாகப் பெற ‘எளிமை ஆளுமை’ திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

தமிழ்நாடு அரசின் முக்கிய 10 சேவைகளை விரைவாகப் பெற வகை செய்யும் ‘எளிமை ஆளுமை’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது, இந்தத் திட்டத்தை... மேலும் பார்க்க