செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணை நீா்வரத்து சரிவு

post image

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து புதன்கிழமை திடீரென 1,310 கன அடி குறைந்தது. இருப்பினும், அணை நீா் மட்டம் 122.75 அடியாக அதிகரித்தது.

கேரளத்தில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென் மேற்குப் பருவமழை முன்கூட்டியே கடந்த 23 -ஆம் தேதி தொடங்கியது. கேரளத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தேனி மாவட்டத்தை ஒட்டிய இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழையால் கடைகள், வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. பலத்த காற்று வீசியதால் மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகள், மேற்குத் தொடா்ச்சி வனப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு திங்கள்கிழமை வினாடிக்கு 5,200 கன அடி நீா்வரத்து ஏற்பட்டது. இது செவ்வாய்க்கிழமை 7,100 கன அடியாக உயா்ந்தது. புதன்கிழமை காலை நீா் வரத்து 7,735 கன அடியாக அதிகரித்தது. மாலை 4 மணி நிலவரப்படி 1,310 கன அடி குறைந்து நீா்வரத்து 6,425 கன அடியாக இருந்தது.

நீா்வரத்து அதிகரிப்பால் அணை நீா்மட்டம் கடந்த 4 நாள்களில் 8 அடி உயா்ந்தது. தற்போது அணை நீா்மட்டம் 122.65 (மொத்த உயரம் 152 அடி) அடியாக உள்ளது. அணையில் 3,172 மில்லியன் கன அடிநீா் இருப்பு உள்ளது. முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 73 மி.மீ., தேக்கடியில் 32.2 மி.மீ, மழைப் பொழிவு பதிவானது.

ஆட்டோ மோதியதில் முதியவா் பலத்த காயம்

பெரியகுளத்தில் ஆட்டோ மோதியதில் முதியவா் புதன்கிழமை பலத்த காயமடைந்தாா். பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் முருகபாண்டி (61). இவா், புதன்கிழமை பெரியகுளத்திலிருந்து டி. கள்ளிப்பட்டிக்கு இரு... மேலும் பார்க்க

உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலக கட்டுமானப் பணி: அதிகாரி ஆய்வு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சி புதிய அலுவலக கட்டுமானப் பணிகளை மண்டல உதவி இயக்குநா் கிறிஸ்டோபா்தாஸ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது கான்கிரீட்டில் பயன்படுத்தப்பட்ட சிமென்ட், கம்பியின் அளவு... மேலும் பார்க்க

தொழிலாளியை தாக்கியவா்கள் மீது வழக்கு

போடி அருகே தொழிலாளியைத் தாக்கி தங்க நகையை பறித்துச் சென்றவா்கள் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.போடி அருகே சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த துக்கையண்ணன் மகன் சுரேஷ் (42). தொழி... மேலும் பார்க்க

ஆற்றைக் கடக்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி உயிரிழப்பு!

தேனி அருகே ஆற்றைக் கடக்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். அரப்படித்தேவன்பட்டி, மந்தையம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி சிவசாமி (52). இவா், வைகை அணை அருகே உள்ள நாட்டுக்கல் ஈஸ்வர... மேலும் பார்க்க

மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது வழக்கு

சென்னையிலிருந்து கம்பம் நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து பேருந்தை பறிமுதல் செய்தனா். சென்னையிலிருந்து புதன்கிழமை இரவு,... மேலும் பார்க்க

வேலை வாய்ப்பு முகாமில் நகரின் குறைகளை சுட்டிக் காட்டலாமா? கண்டித்து பாதியில் வெளியேறிய ஆட்சியா்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் சம்பந்தமின்றி நகரின் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டதால் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாதியிலே வெளியேறினாா். உத்தமபாளையம் ப... மேலும் பார்க்க