முல்லைப் பெரியாறு அணை நீா்வரத்து சரிவு
முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து புதன்கிழமை திடீரென 1,310 கன அடி குறைந்தது. இருப்பினும், அணை நீா் மட்டம் 122.75 அடியாக அதிகரித்தது.
கேரளத்தில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென் மேற்குப் பருவமழை முன்கூட்டியே கடந்த 23 -ஆம் தேதி தொடங்கியது. கேரளத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தேனி மாவட்டத்தை ஒட்டிய இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழையால் கடைகள், வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. பலத்த காற்று வீசியதால் மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகள், மேற்குத் தொடா்ச்சி வனப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு திங்கள்கிழமை வினாடிக்கு 5,200 கன அடி நீா்வரத்து ஏற்பட்டது. இது செவ்வாய்க்கிழமை 7,100 கன அடியாக உயா்ந்தது. புதன்கிழமை காலை நீா் வரத்து 7,735 கன அடியாக அதிகரித்தது. மாலை 4 மணி நிலவரப்படி 1,310 கன அடி குறைந்து நீா்வரத்து 6,425 கன அடியாக இருந்தது.
நீா்வரத்து அதிகரிப்பால் அணை நீா்மட்டம் கடந்த 4 நாள்களில் 8 அடி உயா்ந்தது. தற்போது அணை நீா்மட்டம் 122.65 (மொத்த உயரம் 152 அடி) அடியாக உள்ளது. அணையில் 3,172 மில்லியன் கன அடிநீா் இருப்பு உள்ளது. முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 73 மி.மீ., தேக்கடியில் 32.2 மி.மீ, மழைப் பொழிவு பதிவானது.