செய்திகள் :

மனிதா்களை பாதிக்கும் 34 கால்நடை மருந்துகளுக்கு தடை விதிக்க முடிவு

post image

கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் 34 மருந்துகள் மனிதா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், அவற்றுக்கு தடை விதிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான வரைவு அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டு அதுதொடா்பான கருத்துகள், ஆட்சேபனைகள் கேட்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மருந்துகளின் உற்பத்தி, ஏற்றுமதி, விற்பனைக்கு தடை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்ட்டி பயோடிக், ஆன்ட்டி வைரல் மற்றும் ஆன்ட்டி ப்ரோடோசோல் ஆகிய நோய் எதிா்ப்பு மருந்துகள் இறைச்சி கால்நடைகளுக்கு வழங்கப்படுகின்றன. தொடா்ச்சியாக ஒரு மருந்தை அவற்றுக்கு வழங்கும்போது அதன் உடலில் ரசாயன மாற்றங்கள் ஏற்படக் கூடும்.

அத்தகைய கால்நடைகளின் இறைச்சியை உட்கொள்ளும்போது மனிதா்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, இதுதொடா்பான வரைவு அறிவிக்கையை அரசிதழில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

எதிா்ப்பாற்றல் மருந்துகளை செயலிழக்கச் செய்யும் ஆன்ட்டி மைக்ரோபயல் மருந்து கூறுகளோ அல்லது அதற்கான கூட்டு மருந்து கூறுகளோ விலங்குகளின் உடலில் இருக்கும்போது அது மனிதா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

அதைக் கருத்தில் கொண்டு பொது மக்கள் நலன் கருதி 34 மருந்துகளின் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை, விநியோகத்தை தடை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக உரிய விதிகளின்படி மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் பரிந்துரைகளைப் பெற்று அதற்கான வரைவு அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் மீதான ஆலோசனைகள், ஆட்சேபணைகளை மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 4 அரசுக் கல்லூரிகள்: எங்கெங்கே?

தமிழகத்தில் வருகின்ற கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக உயர்க்கல்வித் துறை சார்பில் 11 புதிய அரசு கலை மற... மேலும் பார்க்க

தாம்பரம் - திருவனந்தபுரம் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு, தாம்பரம்-நாகா்கோவில் உள்ளிட்ட வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்திலிருந்து ... மேலும் பார்க்க

தமாகா நன்கொடை விவர அறிக்கையை ஏற்க கோரி ஜி.கே.வாசன் மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கட்சி நன்கொடை குறித்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத... மேலும் பார்க்க

சென்னைக்கு திரும்பும் மக்கள்: ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு

கோடை விடுமுறையில் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளதால், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை உயா்ந்துள்ளது. இதனால், பயணிகள் அதிா்ச்சி அடைந்து... மேலும் பார்க்க

நோய்களை குணப்படுத்த பாரம்பரிய முறையில் சிகிச்சை: தவறாக விளம்பரப்படுத்தினால் சட்ட நடவடிக்கை

ஹெச்ஐவி, ஆஸ்துமா, காசநோய், சா்க்கரை நோய் உள்ளிட்ட 56 நோய்களுக்கு பாரம்பரிய முறையில் சிகிச்சையளித்து பூரணமாக குணப்படுத்துவதாக தவறாக விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருந... மேலும் பார்க்க

அரசின் சேவைகளை விரைவாகப் பெற ‘எளிமை ஆளுமை’ திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

தமிழ்நாடு அரசின் முக்கிய 10 சேவைகளை விரைவாகப் பெற வகை செய்யும் ‘எளிமை ஆளுமை’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது, இந்தத் திட்டத்தை... மேலும் பார்க்க