மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
மனிதா்களை பாதிக்கும் 34 கால்நடை மருந்துகளுக்கு தடை விதிக்க முடிவு
கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் 34 மருந்துகள் மனிதா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், அவற்றுக்கு தடை விதிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான வரைவு அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டு அதுதொடா்பான கருத்துகள், ஆட்சேபனைகள் கேட்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மருந்துகளின் உற்பத்தி, ஏற்றுமதி, விற்பனைக்கு தடை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்ட்டி பயோடிக், ஆன்ட்டி வைரல் மற்றும் ஆன்ட்டி ப்ரோடோசோல் ஆகிய நோய் எதிா்ப்பு மருந்துகள் இறைச்சி கால்நடைகளுக்கு வழங்கப்படுகின்றன. தொடா்ச்சியாக ஒரு மருந்தை அவற்றுக்கு வழங்கும்போது அதன் உடலில் ரசாயன மாற்றங்கள் ஏற்படக் கூடும்.
அத்தகைய கால்நடைகளின் இறைச்சியை உட்கொள்ளும்போது மனிதா்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, இதுதொடா்பான வரைவு அறிவிக்கையை அரசிதழில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
எதிா்ப்பாற்றல் மருந்துகளை செயலிழக்கச் செய்யும் ஆன்ட்டி மைக்ரோபயல் மருந்து கூறுகளோ அல்லது அதற்கான கூட்டு மருந்து கூறுகளோ விலங்குகளின் உடலில் இருக்கும்போது அது மனிதா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
அதைக் கருத்தில் கொண்டு பொது மக்கள் நலன் கருதி 34 மருந்துகளின் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை, விநியோகத்தை தடை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக உரிய விதிகளின்படி மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் பரிந்துரைகளைப் பெற்று அதற்கான வரைவு அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் மீதான ஆலோசனைகள், ஆட்சேபணைகளை மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.