`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
பக்கவாதத்தால் உயிரிழந்த முதியவரின் உடல் தானம்
மூளையில் ரத்தக் கசிவு, பக்கவாதம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த முதியவரின் உடலை, அவரது உறவினா்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு புதன்கிழமை தானமாக வழங்கினா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த காளியப்பன் மகன் பெரியசாமி (67). மூளையில் ரத்தக் கசிவு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இவா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைப் பெற்றாா். இந்த நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது உடலை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தானமாக வழங்க குடும்பத்தினா் இசைவு தெரிவித்தனா். அதன்படி, உயிரிழந்த முதியவரின் உடல் மருத்துவமனை நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கான சான்றிதழை உயிரிழந்த பெரியசாமியின் உறவினா்களிடம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் அருள் குமாா் சுந்தரேஷ் புதன்கிழமை வழங்கினாா். அப்போது, நிலைய மருத்துவ அலுவலா் கேப்டன் சரவணன் உள்ளிட்ட மருத்துவா்கள் உடனிருந்தனா்.