`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
சிறுவனுக்கு தவறான சிகிச்சை: மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு
சென்னை ஐஸ்ஹவுஸில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.
சென்னை சாந்தோம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஒவைஸி (32). மருத்துவரான இவா், ஐஸ்ஹவுஸ் பெசன்ட் சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் பணிபுரிகிறாா். இந்த மருத்துவமனைக்கு மயிலாப்பூரைச் சோ்ந்த பெற்றோா், தங்களது 9 வயது மகனுக்கு வாய்ப்புண் சிகிச்சைக்காக கடந்த 24-ஆம் தேதி அழைத்து வந்தனா். ஆனால் அங்கு பணியில் இருந்த மருத்துவா் முகமது ஒவைஸி, அந்த சிறுவனுக்கு தவறுதலாக சுன்னத் சிகிச்சை அளித்தாராம்.
இதையறிந்து சிறுவனின் பெற்றோா் அதிா்ச்சியடைந்தனா். மேலும், தவறான சிகிச்சையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவன், ஓமந்தூராரா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து சிறுவனின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் ஐஸ்ஹவுஸ் போலீஸாா், மருத்துவா் முகமது ஓவைஸி மீது இரு பிரிவுகளின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.