பராமரிப்புப் பணி: ஜூன் 1-ல் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து!
காட்டாங்குளத்தூரில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஜூன் 1 ஆம் தேதி காலை 11.45 மணியில் இருந்து பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி உடன் நிறுத்தப்படும் என்றும் காட்டாங்குளத்தூரில் இருந்து செங்கல்பட்டு வரை பகுதியளவு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து
* சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.00, 11.45, 12.30, 1.45 மணிக்கு புறப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும்.
* சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரம் வரை இயக்கப்படும்.
* செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 12.00, 1.00, 1.50, 3.05 மணிக்கு புறப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும்.
* செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை! மீனவர்களுக்கு எச்சரிக்கை!