செய்திகள் :

பராமரிப்புப் பணி: ஜூன் 1-ல் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து!

post image

காட்டாங்குளத்தூரில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ஜூன் 1 ஆம் தேதி காலை 11.45 மணியில் இருந்து பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி உடன் நிறுத்தப்படும் என்றும் காட்டாங்குளத்தூரில் இருந்து செங்கல்பட்டு வரை பகுதியளவு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து

* சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.00, 11.45, 12.30, 1.45 மணிக்கு புறப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும்.

* சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரம் வரை இயக்கப்படும்.

* செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 12.00, 1.00, 1.50, 3.05 மணிக்கு புறப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும்.

* செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

வாய் புற்றுநோய் தொடக்க நிலை பரிசோதனை அறிமுகம்

வாய் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறியும் பரிசோதனை திட்டத்தை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்ப... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 5 கோடி பதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், பயணி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தாய்லாந்து நாட்... மேலும் பார்க்க

சென்னையில் 5 மாதங்களில் சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்பு

சென்னையில் 5 மாதங்களில் பல்வேறு சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ. 10.25 கோடியை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு மீட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு பொதுமக்கள... மேலும் பார்க்க