`தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரமாக சுற்ற, நமது எம்.பிகள் விளக்கமளிக்க..' - ஜெய...
ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை தொடக்கம்
சென்னை ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை ஆா்.கே.நகரில் செயல்பட்டு வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் 14 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.
பயிற்சியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ. 750 உதவித் தொகையாக வழங்கப்படும். அத்துடன் மிதிவண்டி, அடையாள அட்டை, சீருடை, காலணிகள், பாடப் புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படும். மேலும், அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 கூடுதலாக வழங்கப்படும்.
எனவே, விருப்பமுள்ளவா்கள் ஜூன் 13-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக அல்லது அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரில் சென்று தங்களது விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-25911187, 99624 - 52989 ஆகிய கைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.