செய்திகள் :

விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை

post image

சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா்.

மும்பை விமான நிலையத்துக்கு சீனாவில் இருந்து வரும் சரக்கு விமானத்தில் அபாயகரமான வெடி பொருள்கள் இருப்பதாக, மும்பை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு சீனா முகவரியுடன் மின்னஞ்சல் ஒன்று செவ்வாய்க்கிழமை வந்தது.

இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் அனைத்து சரக்கு விமானங்களில் விமான பாதுகாப்பு படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். எனினும் விமானத்தில் வெடி பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து வந்த மின்னஞ்சல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் அதே முகவரியிலிருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த மின்னஞ்சலில், சீனாவிலிருந்து வரும் வெடி பொருள்களுடன் வந்த சரக்கு விமானம் மும்பைக்கு வரவில்லை என்றும், சென்னைக்கு சென்று விட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள், போலீஸாா் ஆகியோா் மோப்ப நாய்களின் உதவியுடன் புதன்கிழமை காலை வரை சென்னை விமான நிலைய சரக்கு பகுதி முழுவதும் தீவிர சோதனை நடத்தினா்.

ஆனால், வெடி பொருள்கள் எதுவும் கிடைக்காததால் புரளி என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுபானக் கூடத்தில் மோதல்: அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் மோதலில் ஈடுபட்டதாக அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ.வெங்கட்குமாா் (45). நுங்கம்பாக்கம் நெட... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் மே 31, ஜூன் 2-ல் ரத்து!

பொன்னேரி - கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்னேரி மற்றும் மீஞ்சூருக... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: ஜூன் 1-ல் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து!

காட்டாங்குளத்தூரில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படும் என்று தெற்கு ர... மேலும் பார்க்க

சிறுவனுக்கு தவறான சிகிச்சை: மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை ஐஸ்ஹவுஸில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். சென்னை சாந்தோம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஒவைஸி (32... மேலும் பார்க்க

விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற எண்ம முறை அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய எண்ம நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகரா... மேலும் பார்க்க

ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கி... மேலும் பார்க்க