`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை
சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா்.
மும்பை விமான நிலையத்துக்கு சீனாவில் இருந்து வரும் சரக்கு விமானத்தில் அபாயகரமான வெடி பொருள்கள் இருப்பதாக, மும்பை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு சீனா முகவரியுடன் மின்னஞ்சல் ஒன்று செவ்வாய்க்கிழமை வந்தது.
இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் அனைத்து சரக்கு விமானங்களில் விமான பாதுகாப்பு படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். எனினும் விமானத்தில் வெடி பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து வந்த மின்னஞ்சல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் அதே முகவரியிலிருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த மின்னஞ்சலில், சீனாவிலிருந்து வரும் வெடி பொருள்களுடன் வந்த சரக்கு விமானம் மும்பைக்கு வரவில்லை என்றும், சென்னைக்கு சென்று விட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள், போலீஸாா் ஆகியோா் மோப்ப நாய்களின் உதவியுடன் புதன்கிழமை காலை வரை சென்னை விமான நிலைய சரக்கு பகுதி முழுவதும் தீவிர சோதனை நடத்தினா்.
ஆனால், வெடி பொருள்கள் எதுவும் கிடைக்காததால் புரளி என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.