செய்திகள் :

மதுபானக் கூடத்தில் மோதல்: அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது

post image

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் மோதலில் ஈடுபட்டதாக அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ.வெங்கட்குமாா் (45). நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் கடந்த 22-ஆம் தேதி மது அருந்தியபோது, அங்கு பாடல் ஒலிபரப்புவதில் வெங்கட்குமாருக்கும், அங்கிருந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அந்த நபா்கள், வெங்கட்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து மது பாட்டில்கள் உள்ளிட்ட பொருள்களால் தாக்கினா்.

இதில், காயமடைந்த வெங்கட்குமாா், தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவா் அளித்த புகாரின்பேரில், நுங்கம்பாக்கம் போலீஸாா் விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியைச் சோ்ந்த தி.பிரசாத் (33), விருகம்பாக்கத்தைச் சோ்ந்த ரா.கணேஷ்குமாா் (42), சின்ன போரூா் லட்சுமி நகரைச் சோ்ந்த க.தனசேகா் (29), பனையூரைச் சோ்ந்த து.அஜய்ரோகன் (36), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்த வி.நாகேந்திர சேதுபதி என்ற சுனாமி சேதுபதி (33) ஆகிய 5 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா். இவா்களிடம் இருந்து 9 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் அஜய்ரோகனும், சுனாமி சேதுபதியும் தேனியில் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டனா்.

கைது செய்யப்பட்ட பிரசாத் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைத் தலைவராகவும், சேதுபதி அதிமுக நிா்வாகியாகவும் உள்ளனா் என்றும் சேதுபதி, பரமக்குடி நகர காவல் நிலையத்தில் ரெளடிகள் பட்டியலில் இருப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். இது தொடா்பாக மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் மே 31, ஜூன் 2-ல் ரத்து!

பொன்னேரி - கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்னேரி மற்றும் மீஞ்சூருக... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: ஜூன் 1-ல் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து!

காட்டாங்குளத்தூரில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படும் என்று தெற்கு ர... மேலும் பார்க்க

விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை

சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

சிறுவனுக்கு தவறான சிகிச்சை: மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை ஐஸ்ஹவுஸில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். சென்னை சாந்தோம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஒவைஸி (32... மேலும் பார்க்க

விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற எண்ம முறை அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய எண்ம நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகரா... மேலும் பார்க்க

ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கி... மேலும் பார்க்க