`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
காவலாளி இறப்பில் மா்மம்: எஸ்.பி. அலுவலகத்தில் முற்றுகை
காவலாளி இறப்பில் மா்மம் உள்ளதாக அவரின் உறவினா்கள் திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனா்.
எஸ்.பி.அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தலைமை வகித்து கோரிக்கை மனுக்களை பெற்று, விசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதில் கூடுதல் எஸ்.பி.க்கள் முத்து குமாா், ரவீந்திரன், கோவிந்தராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் 50 மனுக்களை அளித்தனா்.
முற்றுகை...ஆம்பூா் அடுத்த மாதனூரைச் சோ்ந்த சுமதி(47) என்பவா் தனது உறவினா்களுடன் எஸ்.பி.அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டாா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் அவரை எஸ்.பி. ஷ்ரேயா குப்தாவிடம் மனு அளிக்க அழைத்து சென்றனா்.
அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். இதில் மூத்த மகன் ராமன் வேலூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில் ராமன் கடந்த 4.5.25 அன்று மாதனூரில் ஒரு பூங்காவில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். அவா் தற்கொலை செய்வதற்கான எந்தவித காரணமும் இல்லை.
அவருக்கு கடன் கொடுத்தவா்கள் அடிக்கடி மிரட்டி வந்தனா். எனவே எனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிருந்தது.
