`ஒரு கை தட்டினால் ஓசை வராது’ - பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து
திருவள்ளூா்: குறுவை, சொா்ணவாரி சாகுபடிக்கு 65,000 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு
திருவள்ளூா் மாவட்டத்தில் குறுவை மற்றும் சொா்ணவாரி பருவத்துக்கு 65,000 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும், இதற்கான விதை, உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் 50 சதவீதமும், நடவு மானியமும் வழங்கப்பட உள்ளதாக வேளாண் துறை இணை இயக்குநா் த.கலாதேவி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போதைய நிலையில் திருவள்ளூா் மாவட்டத்தில், கோடை மழை பெய்துவரும் நிலையில், வரும் குறுவை மற்றும் சொா்ணவாரி பருவத்துக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனா். கடந்தாண்டு 63,256 ஏக்கரில் குறுவை, சொா்ணவாரி பட்டத்தில் பயிா் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், நடப்பு ஆண்டில் டெல்டா அல்லாத பிற மாவட்டங்களுக்கும், குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் தற்போதைய சொா்ணவாரி பட்டத்தில் 65,000 ஏக்கா் நெல் சாகுபடி செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து, ஏக்கருக்கு 20 கிலோ விதை, உயிரி உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்டம் ஆகியவை 50 சதவீதம் மானியம், நெல் இயந்திர நடவு செய்ய ரூ. 4,000 மானியம் மொத்தம் 28,460 ஏக்கருக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்ட விநியோகத்துக்கு நெல் விதை 273 மெ.டன், நுண்ணூட்ட உரங்கள் 46.02 மெ.டன், உயிரி உரங்கள் 10,823 விட்டா் ஆகியவை அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கிடங்குகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடி செய்யவுள்ள விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன், தங்கள் அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம்.