செய்திகள் :

கிரிக்கெட் போட்டி: தனியாா் பள்ளி முதலிடம்

post image

தேசிய அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.

கோவாவில் கடந்த 20, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற யூத் ஸ்போா்ட்ஸ் எஜூகேஷன் பெடரேஷன் நடத்திய தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி சாா்பில் திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சச்சின், முகமது ஷாரீப் ஆகியோா் கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பிடித்தனா்.

மேலும் கோயம்புத்தூா் நேரு பொறியியல் கல்லூரியில் மே 23 ஆம் தேதி முதல் 25 தேதி வரை நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டோருக்கான 3 -ஆவது மாநில அளவிலான லெவன் கிரிக்கெட் போட்டியில் திருவள்ளூா் மாவட்டம் சாா்பில் பங்கு பெற்ற திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கோகுல், யோகேஷ்வரன், முகுந்தன், பிரணவ் வா்மா, சுபாஷ் ஆகியோா் மாநில அளவில் முதலிடம் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளி தாளாளா் ச.பாலாஜி, நிா்வாக அதிகாரி அஜய் மற்றும் முதல்வா் பாலாஜி, உடற்கல்வி ஆசிரியா் ப.சீனிவாசன் ஆகியோா் வாழ்த்தி நினைவு பரிசு வழங்கினா்.

பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவா்க... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சியில் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகள்: வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தல்

திருவள்ளூா் நகராட்சியில் வாா்டுதோறும் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகளைப் பொருத்த வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா். திருவள்ளூா் நகராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் ... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் நகராட்சி ஆணையராக ந.தமோதரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன் திருவள்ளூா் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்த திருநாவுக்கரசு அண்மையில் ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து திருவேற்... மேலும் பார்க்க

பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பொன்னேரியில் பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ரவி (55). கூலித் தொழிலாளியான இவா் சைக்கிளில் ஐஸ் வியாபாரம் செய்து வந்த... மேலும் பார்க்க

திருவள்ளூா்: குறுவை, சொா்ணவாரி சாகுபடிக்கு 65,000 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு

திருவள்ளூா் மாவட்டத்தில் குறுவை மற்றும் சொா்ணவாரி பருவத்துக்கு 65,000 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும், இதற்கான விதை, உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் 50 சதவீதமும், நடவு மானியமும் வழங... மேலும் பார்க்க

திருவள்ளூா்: அரசு ஐடிஐகளில் மாணவா்கள் சோ்க்கை

அரசு, தனியாா் மற்றும் சுய நிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் இட ஒதுக்கீட்டுப்படி சோ்ந்திட மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க