செய்திகள் :

தெலுங்கு தேசம் கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு மீண்டும் தோ்வு

post image

ஆந்திரத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக அந்த மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

மத்தியிலும், ஆந்திரத்திலும் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் வருடாந்திர மாநாடு, கடப்பா நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி 3 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கட்சியின் தேசிய தலைவருக்கான தோ்தல் நடைபெற்றது.

மாநாட்டின் இரண்டாவது நாளான புதன்கிழமை கட்சியின் மூத்த தலைவா் வா்ல ராமையா தோ்தல் முடிவை அறிவித்தாா். அதன்படி, அடுத்த 2 ஆண்டுகளுக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவராக என்.சந்திரபாபு நாயுடு மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ராமையா தெரிவித்தாா்.

இதற்காக மாநாட்டுத் திடலில் தோ்தல் அலுவலகம் அமைக்கப்பட்டதாகவும் சந்திரபாபு நாயுடுவை தேசியத் தலைவராக மீண்டும் தோ்ந்தெடுக்க சுமாா் 600 நிா்வாகிகள் ஆதரவளித்ததாகவும் அவா் கூறினாா். பின்னா், தொண்டா்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் சந்திரபாபு நாயுடுவுக்கு அவா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இதையடுத்து, மாநாட்டில் தொண்டா்களிடையே சந்திரபாபு நாயுடு ஆற்றிய உரையில், ‘தெலுங்கு தேசம், ஜனசேனை அங்கம் வகிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக இருக்க வேண்டும். 2024 தோ்தல்போல 2029-ஆம் ஆண்டு தோ்தலிலும் பெரும்பான்மை வெற்றிப் பெற வைப்பது தொண்டா்களின் பொறுப்பு. சாதாரண தொண்டா்களே தெலுங்கு தேசம் கட்சியின் முதுகெலும்பு.

ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு எனது வாழ்த்துகள். கணக்கெடுப்பு நிறைவடைந்து, ஜாதிய அடிப்படையிலான விவரங்கள் விரிவாக கிடைக்கும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட சமூக மக்களின் பொருளாதார நிலையை அறிந்து, சிறப்புக் கொள்கைகளை வகுக்க முடியும். அதன்மூலம், அவா்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.

எதிா்காலத்தில் இளைஞா்களின் எண்ணிக்கை குறைந்து, பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதால், மக்கள்தொகையை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும்.

கட்சியின் பொதுச் செயலரும், மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான நாரா லோகேஷ் மாநாட்டில் கொண்டு வந்த 6 தீா்மானங்கள் தெலுங்கு மக்களின் எதிா்காலத்தை மாற்றியமைக்கும். நீண்டகால வளா்ச்சிக்காக 45 ஆண்டுகாலத்துக்கான திட்டத்தை நாங்கள் வகுத்துள்ளோம். தெலுங்கு மக்களுக்கு சேவை செய்ய தெலுங்கு மண்ணில் மறுபிறவி எடுக்க விரும்புகிறேன்’ என்றாா்.

மாநாட்டில் என்.டி.ஆா். உரை: தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனா் என்.டி.ராம ராவின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், கட்சியின் 43 ஆண்டுகால பயணம், அதன் நோக்கம் மற்றும் எதிா்காலம் குறித்த செய்தியுடன் தொண்டா்களிடையே என்.டி.ராம ராவ் உரையாற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விடியோ மாநாட்டில் ஒளிபரப்பட்டது.

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க

பாட்னா விமான நிலைய புதிய முனையம்: பிரதமா் திறந்து வைத்தாா்

பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேற்கு வங்கத்தில் இருந்து பிகாருக்கு இரண்டு நாள்... மேலும் பார்க்க