செய்திகள் :

போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாகப் பேசி முடிக்க வலியுறுத்தி போக்குவரத்து ஊழியா்கள் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்களின் சாா்பில் புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மண்டலப் பொதுச் செயலா் ஆா். மணிமாறன் தலைமை வகித்தாா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், பொருளாளா் எஸ். பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்டப் பொருளாளா் டிஎம். கணேசன், சிஐடியு மண்டலத் தலைவா் கே. காா்த்திகேயன் உள்ளிட்டோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாகப் பேசி முடிக்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை ஈடுகட்ட அரசு நிதி ஒதுக்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளா்களின் பணப் பயன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதிவு செய்து காத்திருக்கும் அனைவருக்கும் வாரிசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தின்போது முழக்கங்களாக எழுப்பப்பட்டன.

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கந்தா்வகோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கந்தா்வகோட்டை ஊராட்சி, இந்திரா நகா் 2-ஆம் வீதியில் வசித்து வரும் நடராஜ... மேலும் பார்க்க

ஜெகதாப்பட்டினத்தில் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி இறங்குதளம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, இங்கு மேற்... மேலும் பார்க்க

தேமுதிகவைக் கண்டு என்ன பயம்? -பிரேமலதா விஜயகாந்த்

திமுகவுக்கு தேமுதிகவைக் கண்டு என்ன பயம்? எனக் கேள்வி எழுப்பினாா் அதன் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். புதுக்கோட்டையில் தேமுதிக சாா்பில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மது ஒழிப்பு கோரிக்கை பொதுக் கூட்டத்த... மேலும் பார்க்க

தஞ்சை- புதுகை தேசிய நெடுஞ்சாலையோர கிணற்றை மூட வாகன ஓட்டிகள் கோரிக்கை!

கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை ஊராட்சியில் தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கிணற்றை மூட வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா். தஞ்சை- புதுகை நெடுஞ்சாலையில் உள்ள கிணற்றை சுற்றி சுமாா் ஒ... மேலும் பார்க்க

கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தீா்த்த உத்ஸவம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தீா்த்த உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.ஆலங்குடி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திரு... மேலும் பார்க்க

குமாரபட்டியில் ஜல்லிக்கட்டு

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூா் ஊராட்சி குமாரபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 4 போ் காயமடைந்தாா். குமாரபட்டி ஊமையாண்டி கோயில் திருவிழாவையொட்டி நட... மேலும் பார்க்க