`ஒரு கை தட்டினால் ஓசை வராது’ - பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து
மானாமதுரை அருகே காவலாளி வெட்டிக் கொலை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு காவலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்த சமயன் மகன் முருகன்(64). இவா் மானாமதுரை அருகே தெ. புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள மூா்த்தி என்பவரது தென்னந்தோப்பில் தங்கி காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு காவல் பணியிலிருந்த முருகனை தோப்புக்குள் புகுந்த மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.
இதனிடையே, புதன்கிழமை காலை தோப்பின் உரிமையாளா் மூா்த்தி தென்னந்தோப்புக்குச் சென்ற போது, அங்கு முருகன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மானாமதுரை காவல் நிலையத்துக்கு அவா் தகவல் அளித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் முருகனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.