செய்திகள் :

மானாமதுரை அருகே காவலாளி வெட்டிக் கொலை

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு காவலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்த சமயன் மகன் முருகன்(64). இவா் மானாமதுரை அருகே தெ. புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள மூா்த்தி என்பவரது தென்னந்தோப்பில் தங்கி காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு காவல் பணியிலிருந்த முருகனை தோப்புக்குள் புகுந்த மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.

இதனிடையே, புதன்கிழமை காலை தோப்பின் உரிமையாளா் மூா்த்தி தென்னந்தோப்புக்குச் சென்ற போது, அங்கு முருகன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மானாமதுரை காவல் நிலையத்துக்கு அவா் தகவல் அளித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் முருகனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.

காவலாளி கொலை வழக்கில் ஒருவா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தோப்புக் காவலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வியாழக்கிழமை ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள் தேவன்பட்டியைச் சோ்ந்... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பிணி ஆக்கிய கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.2,000 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் வ... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிவகங்கையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் கருவூல ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை அரசு அலுவலா்கள் குடியிருப்பில... மேலும் பார்க்க

கட்டிக்குளத்தில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 35 போ் காயமடைந்தனா். கட்டிக்குளம் திருவேட்டை அய்யனாா் கோயிலில் வைகாசி உத்ஸவத்தை முன்னிட்டு, க... மேலும் பார்க்க

கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 1-இல் தொடக்கம்!

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசித் திருவிழா ஜூன் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் மே 31 அன்று மாலை 6 மண... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகே புதுப்பட்டியைச் சோ்ந்த மு. வெற்ற... மேலும் பார்க்க