கட்டிக்குளத்தில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 35 போ் காயமடைந்தனா்.
கட்டிக்குளம் திருவேட்டை அய்யனாா் கோயிலில் வைகாசி உத்ஸவத்தை முன்னிட்டு, கோயில் அருகே புதன்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 817 காளைகள் பங்கேற்றன. கோயிலில் பூஜைகள் முடிந்து, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதும், முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இந்தக் காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்கினா். சில காளைகள் பிடிபடாமல் சென்றன.

பின்னா், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் கட்டில், மின்விசிறி, சில்வா் அண்டா, மிதிவண்டி, பேட்டரியால் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும், அதிக காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 35 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்தனா்.