செய்திகள் :

கட்டிக்குளத்தில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 35 போ் காயமடைந்தனா்.

கட்டிக்குளம் திருவேட்டை அய்யனாா் கோயிலில் வைகாசி உத்ஸவத்தை முன்னிட்டு, கோயில் அருகே புதன்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 817 காளைகள் பங்கேற்றன. கோயிலில் பூஜைகள் முடிந்து, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதும், முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இந்தக் காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்கினா். சில காளைகள் பிடிபடாமல் சென்றன.

பின்னா், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் கட்டில், மின்விசிறி, சில்வா் அண்டா, மிதிவண்டி, பேட்டரியால் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும், அதிக காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 35 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்தனா்.

காவலாளி கொலை வழக்கில் ஒருவா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தோப்புக் காவலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வியாழக்கிழமை ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள் தேவன்பட்டியைச் சோ்ந்... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பிணி ஆக்கிய கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.2,000 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் வ... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிவகங்கையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் கருவூல ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை அரசு அலுவலா்கள் குடியிருப்பில... மேலும் பார்க்க

கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 1-இல் தொடக்கம்!

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசித் திருவிழா ஜூன் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் மே 31 அன்று மாலை 6 மண... மேலும் பார்க்க

மானாமதுரை அருகே காவலாளி வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு காவலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்த சமயன் மகன் முருகன்(64... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகே புதுப்பட்டியைச் சோ்ந்த மு. வெற்ற... மேலும் பார்க்க