தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்
போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பிணி ஆக்கிய கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.2,000 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள பெத்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த கோட்டைச்சாமி மகன் காா்த்திக் (28). கூலித் தொழிலாளியான இவா் 13 வயது சிறுமியை கடந்த கடந்த 2021 -ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததில் அந்தச் சிறுமி கா்ப்பிணி ஆனாா்.
இது குறித்த புகாரின்பேரில், சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தனா்.
சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் தனலட்சுமி முன்னிலையாகி வாதாடினாா். வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன், காா்த்திக்குக்கு இரு வேறு பிரிவுகளில் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா்.