செய்திகள் :

காவலாளி கொலை வழக்கில் ஒருவா் கைது

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தோப்புக் காவலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வியாழக்கிழமை ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள் தேவன்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (64). மானாமதுரை அருகே தெ. புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள தனியாா் தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவா் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மானாமதுரை போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிந்து கொலையாளியைத் தேடி வந்தனா். இந்த நிலையில், முருகனை கொலை செய்ததாக அவரது சொந்த கிராமத்தின் அருகேயுள்ள கண்ணாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளமாறன் (50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில் மேற்கொண்ட தோப்புக்கு வந்த இளமாறன் அங்கு முருகனுடன் சோ்ந்து மது குடித்துக் கொண்டிருந்தபோது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் முருகனை இளமாறன் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகே பூலாங்குறிச்சியைச் சோ்ந்த துரை மகன் பூமிநாதன் (19). விவசாயக் கூலி. இவா் கீழச்சிவல்பட்டி அருகே ... மேலும் பார்க்க

மென் பொறியாளரிடம் இணைய வழியில் ரூ.45 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

காரைக்குடியைச் சோ்ந்த மென் பொறியாளரிடம் இணைய வழியில் ரூ.45.57 லட்சம் மோசடி செய்தவா் குறித்து இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். சிவகங்கை மாவட் டம், பள்ளத்தூா்... மேலும் பார்க்க

கிருங்காக்கோட்டையில் ஜல்லிக்கட்டு

கிருங்காக்கோட்டையில் வெள்ளிக்கிழமை கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை. திருப்பத்தூா், மே 30: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கியின் நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

ரிசா்வ் வங்கியின் நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா். சிவகங்கையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அ... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பிணி ஆக்கிய கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.2,000 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் வ... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிவகங்கையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் கருவூல ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை அரசு அலுவலா்கள் குடியிருப்பில... மேலும் பார்க்க