கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 1-இல் தொடக்கம்!
சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசித் திருவிழா ஜூன் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் மே 31 அன்று மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும். விழாவையொட்டி, வருகிற ஜூன் 1-ஆம் தேதி காலை 9.25 மணியளவில் கொடியேற்றமும், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு காப்புக் கட்டுதலுடனும் வைகாசி திருவிழா தொடங்குகிறது. 11 நாள்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு, தினமும் காலை 9 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் அம்மன் வீதியுலா வருவாா்.
தினமும் இரவு 7 மணிக்கு அம்மன் சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளி ரிஷபம், வெள்ளிக் குதிரை ஆகிய வாகனங்களில் வீதியுலா வருவாா். வருகிற ஜூன் 7-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் அம்மன் கோயில் வளாகத்தில் வலம் வருவாா்.
ஜூன் 8-ஆம் தேதி களியாட்ட கண்ணாத்தாளுக்கு காப்புக் கட்டுதல், அன்று இரவு 7 மணிக்கு அம்மன் வெள்ளி ரதத்தில் வீதியுலா காட்சி நடைபெறும். ஜூன் 9-ஆம் தேதி அதிகாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளுவாா். அன்று காலை 9.25 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். அன்று இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா வருவாா்.
ஜூன் 10-ஆம் தேதி காலை 8 மணியளவில் பக்தா்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நோ்த்திக்கடன் செலுத்துவா். ஜூன் 11-ஆம் தேதி காலை உத்ஸவ சாந்தியும், மாலை வெள்ளி ஊஞ்சல் உத்ஸவத்துடனும் வைகாசி திருவிழா நிறைவு பெறும்.