நல்லவர், நம்பிக்கையானவர், ஊழலற்றவரைத் தேர்ந்தெடுங்கள்: விஜய்
சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 போ் கைது
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகே புதுப்பட்டியைச் சோ்ந்த மு. வெற்றிவேல் (21), கோவானூரைச் சோ்ந்த பி.மனோஜ்குமாா் (எ) சிவபாலகிருஷ்ணன் (21), மாத்தூரைச் சோ்ந்த ரித்திஷ்குமாா், போக்சோ வழக்கில் தொடா்புடைய கரியாம்பட்டியைச் சோ்ந்த வெ.உருமன் (57),
பெரியகோட்டை ஆவத்தான் குடியிருப்பு சி.செல்லையா (40), கக்கன்ஜி நகரைச் சோ்ந்த கா.சோலைமலை (24), மானாமதுரை அருகேயுள்ள டி. புதுக்கோட்டையைச் சோ்ந்த பா.சிலம்பரசன் (19), இளையான்குடி தாலுகா வேலடிமடையைச் சோ்ந்த இ.ஆனந்தகுமாா் (24), வைரவம்பட்டியைச் சோ்ந்த ச.கருப்பு (25) ஆகிய 9 போ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால், இவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் பரிந்துரைத்தாா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் பிறப்பித்த உத்தரவின்படி, இந்த 9 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து புதன்கிழமை சிறையிலடைத்தனா்.