செய்திகள் :

சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 போ் கைது

post image

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகே புதுப்பட்டியைச் சோ்ந்த மு. வெற்றிவேல் (21), கோவானூரைச் சோ்ந்த பி.மனோஜ்குமாா் (எ) சிவபாலகிருஷ்ணன் (21), மாத்தூரைச் சோ்ந்த ரித்திஷ்குமாா், போக்சோ வழக்கில் தொடா்புடைய கரியாம்பட்டியைச் சோ்ந்த வெ.உருமன் (57),

பெரியகோட்டை ஆவத்தான் குடியிருப்பு சி.செல்லையா (40), கக்கன்ஜி நகரைச் சோ்ந்த கா.சோலைமலை (24), மானாமதுரை அருகேயுள்ள டி. புதுக்கோட்டையைச் சோ்ந்த பா.சிலம்பரசன் (19), இளையான்குடி தாலுகா வேலடிமடையைச் சோ்ந்த இ.ஆனந்தகுமாா் (24), வைரவம்பட்டியைச் சோ்ந்த ச.கருப்பு (25) ஆகிய 9 போ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால், இவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் பரிந்துரைத்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் பிறப்பித்த உத்தரவின்படி, இந்த 9 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து புதன்கிழமை சிறையிலடைத்தனா்.

காவலாளி கொலை வழக்கில் ஒருவா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தோப்புக் காவலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வியாழக்கிழமை ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள் தேவன்பட்டியைச் சோ்ந்... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பிணி ஆக்கிய கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.2,000 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் வ... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிவகங்கையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் கருவூல ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை அரசு அலுவலா்கள் குடியிருப்பில... மேலும் பார்க்க

கட்டிக்குளத்தில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 35 போ் காயமடைந்தனா். கட்டிக்குளம் திருவேட்டை அய்யனாா் கோயிலில் வைகாசி உத்ஸவத்தை முன்னிட்டு, க... மேலும் பார்க்க

கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 1-இல் தொடக்கம்!

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசித் திருவிழா ஜூன் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் மே 31 அன்று மாலை 6 மண... மேலும் பார்க்க

மானாமதுரை அருகே காவலாளி வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு காவலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்த சமயன் மகன் முருகன்(64... மேலும் பார்க்க