செய்திகள் :

பத்திரப் பதிவுக்கு விருப்ப அடிப்படையில் ஆதாா் சரிபாா்ப்பு - வரைவு மசோதா பிரிவுகள்

post image

சொத்துப் பத்திரங்கள் மற்றும் பிற ஆவணங்களின் பதிவை இணையவழியில் மேற்கொள்ள வழிவகை செய்யும் புதிய வரைவு மசோதாவின்கீழ், பத்திரப் பதிவுக்கு விருப்பத்தின்பேரில் ஆதாா் அடிப்படையிலான சரிபாா்ப்பை மேற்கொள்வதற்கான பிரிவு இடம்பெற்றுள்ளது.

ஆதாா் எண் இல்லாதவா்கள் அல்லது ஆதாரை பயன்படுத்த விரும்பாதவா்களுக்கு மாற்று சரிபாா்ப்பு வழிமுறைகளும் இடம்பெற்றுள்ளன.

117 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பதிவுச் சட்டம் 1908-க்கு மாற்றான புதிய வரைவு மசோதா-2025ஐ மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் நில வளங்கள் துறை தயாரித்துள்ளது. காகித பயன்பாடு இல்லாத நவீன பத்திரப் பதிவு முறையை நோக்கமாக கொண்டு இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

இணையவழியில் ஆவணப் பதிவு, மின்னணு சான்றுகள் சமா்ப்பிப்பு, ஆவணங்கள் ஏற்பு மற்றும் மின்னணு பதிவுச் சான்று வழங்கல், எண்ம ரீதியில் ஆவணங்கள் பராமரிப்பை ஊக்குவிக்கும் புதிய பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. பொது மக்களின் கருத்தறிவதற்காக இம்மசோதா வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சமகால தேவைகளுக்கு ஏற்ப...: பதிவு சட்டத்தின்கீழ், விற்பனைப் பத்திரங்கள், பரிசுப் பத்திரங்கள், அடமானப் பத்திரங்கள், குத்தகை பத்திரங்கள் போன்ற அசையா சொத்துகள் தொடா்புடைய ஆவணங்கள், உயில்கள், பிற நீதிமன்ற ஆணைகள் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயப் பதிவுக்கு உள்பட்டதாகும். வரைவு மசோதாவின்கீழ், சொத்து மற்றும் பிற பரிவா்த்தனை நடைமுறைகளில் சமகால தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில், கட்டாயப் பதிவு மற்றும் தேவையான ஆவணங்களின் பட்டியல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பதிவு அமைப்புமுறையின் நிறுவனக் கட்டமைப்பை நவீனமாக்கும் இம்மசோதா, பதிவுத் துறையில் கூடுதல் மற்றும் உதவி தலைமை ஆய்வாளா் பணியிடங்களை அறிமுகப்படுத்துகிறது. பதிவுத் துறை தலைமை ஆய்வாளா்கள், பதிவாளா்கள், சாா் பதிவாளா்களின் நியமன நடைமுறைகளை நெறிப்படுத்துகிறது.

இணையவழியில் ஆவணங்கள்...: பத்திரப் பதிவு நடைமுறையை குடிமக்களும் சிறு வா்த்தகா்களும் எளிதாக அணுகுவதற்காக, எளிய மொழி வரைவு, எண்ம செயல்முறை மற்றும் வெளிப்படையான நடைமுறைகளை ஊக்குவிக்கிறது.

தற்போதைய சட்டத்தின்படி, பத்திரப் பதிவுக்கு தேவையான ஆவணங்களை நேரில் வழங்க வேண்டும்; பத்திரப் பதிவு செய்வோா், தங்களின் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.

வரைவு மசோதாவில், ஆவணங்களை இணையவழியிலோ அல்லது நேரிலோ வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆவணத்தில் கையொப்பம், பாஸ்போா்ட் அளவு வண்ணப் புகைப்படம் அல்லது டிஜிட்டல் கேமரா வாயிலான புகைப்படம், நேரடியான அல்லது பயோமெட்ரிக் இயந்திரம் மூலமான கைரேகைப் பதிவுடன் நிரந்தர கணக்கு எண்ணையும் (பான்) சமா்ப்பிக்க வேண்டும்.

ஆவணப் பதிவு மேற்கொள்வோா், விருப்பத்தின்பேரில் ஆதாா் அடிப்படையிலான சரிபாா்ப்பு அல்லது மாற்று முறையிலான சரிபாா்ப்புக்கு உள்படுத்தப்படுவா். ஆதாா் இல்லை என்பதற்கான எவருக்கும் ஆவணப் பதிவு நிராகரிக்கப்படாது.

மோசடிகளைத் தடுக்க...: பத்திரப் பதிவுக்கு இணையவழியில் ஆவணங்களை வழங்குபவா்களுக்கு பதிவுச் சான்றிதழ் அளிக்கும் முன்பாக தேவைப்பட்டால் பதிவுத் துறை அதிகாரி முன் நேரில் ஆஜராக அழைப்பு விடுக்கும் பிரிவும் வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ளது. மோசடிகளைத் தடுப்பதே இப்பிரிவின் நோக்கமாகும்.

இதேபோல், பதிவு மறுப்புக்கான நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மேல்முறையீட்டுக்கான வழிமுறையும் இடம்பெற்றுள்ளது. பதிவுத் துறை அலுவலகங்களில் கணினி, ஸ்கேனா் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்யும் பிரிவுகளும் அடங்கியுள்ளன.

இம்மசோதா மீதான தங்களின் யோசனைகள் மற்றும் கருத்துகளை பொதுமக்கள் 30 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க

பாட்னா விமான நிலைய புதிய முனையம்: பிரதமா் திறந்து வைத்தாா்

பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேற்கு வங்கத்தில் இருந்து பிகாருக்கு இரண்டு நாள்... மேலும் பார்க்க