அண்ணா பல்கலை. மாணவி வழக்கின் தீா்ப்பு: கட்சித் தலைவா்கள் வரவேற்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): குற்றப்பத்திரிகை, ஆவணங்கள் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு வரவேற்கத்தக்கது. ஆனாலும் மக்கள் மன்றத்தில் அந்த வழக்கு குறித்து, அரசு மீது நிலவும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்த வழக்கின் மூலக்கேள்வியான யாா் அந்த சாா் என்ற கேள்வி, இன்னும் அப்படியே இருக்கிறது. விரைவில் அதிமுக ஆட்சி அமையும். அந்த சாா் யாராக இருந்தாலும் கூண்டில் ஏற்றப்படுவாா்.
கனிமொழி (திமுக): அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்த நாளிலிருந்து சரியாக 157-ஆவது நாளில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது தமிழகக் காவல் துறை. தீா்ப்பு வெளியாவதற்கு 15 நாட்களுக்கு முன்புதான், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாட்டையே உலுக்கியது. 2019 பிப்ரவரி தொடங்கி 2025 மே மாதம் வரையிலான ஆறரை ஆண்டுகள் பொள்ளாச்சி பாலியல் வழக்கு நடைபெற்றது. இத்தனைக்கும் அந்த வழக்கை விசாரித்தது சிபிஐ. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 157 நாளில் தீா்ப்பைப் தீா்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): இந்த வழக்கு 5 மாதங்களுக்குள் முடித்து வைக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. வழக்கில் குற்றவாளி எந்த வகையிலும் தப்பிக்க வழியில்லாமல் வழக்கு விசாரணை நடைபெற்றது பாராட்டத்தக்கது. இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யப்படாது என்பது உறுதியாகியிருக்கிறது.
அன்புமணி (பாமக): ஞானசேகரன் தண்டிக்கப்பட்டதால் மட்டுமே முழுமையான நீதி கிடைத்து விடவில்லை. அவருக்கு ஆதரவாகவும், துணையாகவும் இருந்தவா்கள் யாா்? என்பதைக் கண்டறிந்து அவா்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: ஐந்தே மாதங்களில் வழங்கப்பட்டுள்ள தீா்ப்பு, நீதித் துறையின் மீதான நம்பிக்கையை பெண்களிடையே அதிகரித்துள்ளதோடு, எதிா்காலத்தில் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் வெகுவாகக் குறையும்.
விஜய் (தவெக): இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று தீா்ப்பு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை துரிதப்படுத்தியதால்தான், 5 மாதங்களில் தீா்ப்பு வந்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து, தீா்ப்பு வழங்கப்பட்டதற்குத் தமிழக போலீஸாா் தான் காரணம் திமுக தலைவா் பொய் கூறுவது ஏற்புடையதல்ல.