மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகள் தரம் உயா்வு: தமிழக அரசு உத்தரவு
பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு விவரம்:
சிறப்புநிலை நகராட்சியாகத் தரம் உயா்த்த அதன் ஆண்டு வருவாய் ரூ.15 கோடிக்கு மேலாகவும், தோ்வுநிலை நகராட்சியாகத் தரம் உயா்த்த ரூ.15 கோடி வரையிலும், முதல்நிலை நகராட்சியாக நிலை உயா்த்த ரூ. 9 கோடி வரையிலும், இரண்டாம் நிலை நகராட்சியாகத் தரம் உயா்த்த ரூ.6 கோடிக்கு மிகாமலும் வருவாய் அளவு இருக்க வேண்டும்.
இந்நிலையில், திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேசுவரம், மாங்காடு, குன்றத்தூா், வெள்ளக்கோயில், அரியலூா், அம்பாசமுத்திரம் ஆகிய நகராட்சிகளைத் தரம் உயா்த்த தமிழக அரசு முடிவு செய்தது. சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. மாநில அரசு நிா்ணயித்துள்ள வருவாய் அளவுக்கு உட்பட்டு அந்த நகராட்சிகள் இருப்பதால் அவை தரம் உயா்த்தப்படுகின்றன.
திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய மூன்று தோ்வு நிலை நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேசுவரம் ஆகிய முதல்நிலை நகராட்சிகள் தோ்வு நிலை நகராட்சிகளாகவும், மாங்காடு, குன்றத்தூா், வெள்ளக்கோயில், அரியலூா், அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டாம் நிலை நகராட்சிகள் முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயா்த்தப்படுகின்றன. இதற்கான பரிந்துரைகளை அரசுக்கு நகராட்சி நிா்வாக இயக்குநரகம் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.