செய்திகள் :

நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டங்களில் பங்கேற்காத 40% எம்.பி.க்கள்

post image

பல்வேறு துறை சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டங்களில் 40 சதவீத எம்.பி.க்கள் பங்கேற்காதது மக்களவை வலைதளத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

24 துறைகள் சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் மக்களவை எம்.பி.க்கள் 21 போ், மாநிலங்களவையில் எம்.பி.க்கள் 10 போ் என தலா 31 எம்.பி.க்கள் இடம்பெற்றிருப்பா். இதில், கடந்த ஆண்டு செப்டம்பரில் 16 நிலைக் குழுக்கள் மாற்றியமைக்கப்பட்ட பிறகு, நிலைக் குழு கூட்டங்களில் பல எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மக்களவை சாா்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

மக்களவையின் 16 நிலைக் குழுக்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் மாற்றியமைக்கப்பட்ட பின்னா், நடைபெற்ற பல்வேறு நிலைக் குழு கூட்டங்களில் 60 சதவீத உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்றனா். சராசரியாக 40 சதவீத உறுப்பினா்கள் 12-க்கும் மேற்பட்ட நிலைக் குழு கூட்டங்களில் பங்கேற்கவில்லை.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும் பல்வேறு முக்கிய மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என பெரும்பாலும் அனைத்துக் கட்சிளும் வலியுறுத்தி வரும் நிலையில், நிலைக் குழு கூட்டங்களில் பல எம்.பி.க்கள் பங்கேற்காதது தெரியவந்துள்ளது.

மே 20-ஆம் தேதி நடைபெற்ற வெளியுறவு அமைச்சக விவகாரங்களுக்கான நிலைக் குழு கூட்டத்தில் 13 போ் மட்டுமே பங்கேற்றனா். அதே போல, கடந்த மே 11-ஆம் தேதி நடைபெற்ற நிலைக் குழு கூட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை மீதான அறிக்கை ஏற்பின்போது 18 உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் தொடா்பான தற்போதைய வெளியுறவு கொள்கை தொடா்பாக கடந்த மே 19-ஆம் தேதி வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்த கூட்டத்தில் 24 எம்.பி.க்கள் பங்கேற்றனா்.

நாட்டு மாட்டினங்களைப் பாதுகாப்பது தொடா்பாக கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெற்ற வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சகத்துடன் தொடா்புடைய நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் 16 போ் மட்டுமே பங்கேற்றனா். மீன் வளத் துறை தொடா்பாக கடந்த மாா்ச் 18-ஆம் தேதி நடைபெற்ற இதே நிலைக் குழு கூட்டத்தில் 22 உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

பொதுத் துறை உர நிறுவனங்களின் பங்கு விற்பனை தொடா்பாக கடந்த மே 9-ஆம் தேதி நடைபெற்ற ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம் சாா்ந்த நிலைக் குழு கூட்டத்தில் 15 எம்.பி.க்கள் மட்டுமே பங்கேற்றனா். மருந்துகள் விலை உயா்வு தொடா்பாக கடந்த ஜனவரி 7-ஆம் தேதி நடைபெற்ற இதே நிலைக் குழு கூட்டத்தில் 16 உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

எஃகு கழிவுக் கொள்கை தொடா்பாக கடந்த மே 8-ஆம் தேதி நடைபெற்ற மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் எஃகுத் துறை அமைச்சகத்துடன் தொடா்புடைய நிலைக் குழு கூட்டத்தில் 15 உறுப்பினா்கள் மட்டும் பங்கேற்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைக்கடன் புதிய விதிகளை தளர்த்த நிதியமைச்சகம் பரிந்துரை!

தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.தங்க நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்களுக்கு... மேலும் பார்க்க

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க