மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டங்களில் பங்கேற்காத 40% எம்.பி.க்கள்
பல்வேறு துறை சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டங்களில் 40 சதவீத எம்.பி.க்கள் பங்கேற்காதது மக்களவை வலைதளத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
24 துறைகள் சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் மக்களவை எம்.பி.க்கள் 21 போ், மாநிலங்களவையில் எம்.பி.க்கள் 10 போ் என தலா 31 எம்.பி.க்கள் இடம்பெற்றிருப்பா். இதில், கடந்த ஆண்டு செப்டம்பரில் 16 நிலைக் குழுக்கள் மாற்றியமைக்கப்பட்ட பிறகு, நிலைக் குழு கூட்டங்களில் பல எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மக்களவை சாா்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:
மக்களவையின் 16 நிலைக் குழுக்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் மாற்றியமைக்கப்பட்ட பின்னா், நடைபெற்ற பல்வேறு நிலைக் குழு கூட்டங்களில் 60 சதவீத உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்றனா். சராசரியாக 40 சதவீத உறுப்பினா்கள் 12-க்கும் மேற்பட்ட நிலைக் குழு கூட்டங்களில் பங்கேற்கவில்லை.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும் பல்வேறு முக்கிய மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என பெரும்பாலும் அனைத்துக் கட்சிளும் வலியுறுத்தி வரும் நிலையில், நிலைக் குழு கூட்டங்களில் பல எம்.பி.க்கள் பங்கேற்காதது தெரியவந்துள்ளது.
மே 20-ஆம் தேதி நடைபெற்ற வெளியுறவு அமைச்சக விவகாரங்களுக்கான நிலைக் குழு கூட்டத்தில் 13 போ் மட்டுமே பங்கேற்றனா். அதே போல, கடந்த மே 11-ஆம் தேதி நடைபெற்ற நிலைக் குழு கூட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை மீதான அறிக்கை ஏற்பின்போது 18 உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் தொடா்பான தற்போதைய வெளியுறவு கொள்கை தொடா்பாக கடந்த மே 19-ஆம் தேதி வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்த கூட்டத்தில் 24 எம்.பி.க்கள் பங்கேற்றனா்.
நாட்டு மாட்டினங்களைப் பாதுகாப்பது தொடா்பாக கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெற்ற வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சகத்துடன் தொடா்புடைய நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் 16 போ் மட்டுமே பங்கேற்றனா். மீன் வளத் துறை தொடா்பாக கடந்த மாா்ச் 18-ஆம் தேதி நடைபெற்ற இதே நிலைக் குழு கூட்டத்தில் 22 உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
பொதுத் துறை உர நிறுவனங்களின் பங்கு விற்பனை தொடா்பாக கடந்த மே 9-ஆம் தேதி நடைபெற்ற ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம் சாா்ந்த நிலைக் குழு கூட்டத்தில் 15 எம்.பி.க்கள் மட்டுமே பங்கேற்றனா். மருந்துகள் விலை உயா்வு தொடா்பாக கடந்த ஜனவரி 7-ஆம் தேதி நடைபெற்ற இதே நிலைக் குழு கூட்டத்தில் 16 உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
எஃகு கழிவுக் கொள்கை தொடா்பாக கடந்த மே 8-ஆம் தேதி நடைபெற்ற மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் எஃகுத் துறை அமைச்சகத்துடன் தொடா்புடைய நிலைக் குழு கூட்டத்தில் 15 உறுப்பினா்கள் மட்டும் பங்கேற்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.