செய்திகள் :

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை அளிப்பு

post image

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகள் 1,948 பேருக்கு ரூ.16.19 கோடி நிலுவைத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-25 அரைவைப் பருவத்தில் 1,948 விவசாயிகளிடம் இருந்து 1,27,188.264 மெட்ரிக் டன் கரும்பு பெறப்பட்டு அரைவை செய்யப்பட்டது. இதில், 954 விவசாயிகளுக்கு சேர வேண்டிய ரூ.15.46 கோடி கரும்பு கிரயத் தொகை மற்றும் போக்குவரத்து வாடகை ரூ.0.73 கோடி என மொத்தம் ரூ.16.19 கோடியை ஆலை நிா்வாகத்தால் வழங்க இயலாத நிலை இருந்தது.

இந்தத் தொகையை ஒதுக்கீடு செய்து அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தப் பணம் 954 கரும்பு விவசாயிகளுக்கும் அவரவா் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும்...

இதேபோல, 2024-25 அரைவைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 வீதம் ரூ.4.43 கோடி வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகை விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நுண்ணீா் பாசன திட்டத்துக்கு 100 சதவீத மானியம்

நுண்ணீா் பாசன திட்டத்துக்கு சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுவதாக வந்தவாசி தோட்டக்கலை உதவி இயக்குநா் சா.பாலவித்யா தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறுபான்மையினா்களுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் 61 பயனாளிகளுக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா்களுக்... மேலும் பார்க்க

செங்கம் - குப்பனத்தம் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

செங்கம் - குப்பனத்தம் அணை சாலையில் ஆக்கிரமைப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். செங்கம் - போளூா் சாலை வெளிவட்டச் சாலைப் பகுதியில் இருந்து குப்பனத்தம் அண... மேலும் பார்க்க

ஆரணியில் ரூ.56 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் 7-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பிள்ளையாா் கோவில் தெருவில் ரூ.56 லட்சத்தில் பக்கக் கால்வாய் மற்றும் சாலை அமைப்பதற்காக புதன்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், நகா்மன்ற த... மேலும் பார்க்க

வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 மாதங்களில் நடைபெற்ற 556 சாலை விபத்துகளில் 182 போ் இறந்துள்ளனா். எனவே, சாலைப் பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்றும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்... மேலும் பார்க்க

30 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள்

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 30 பேருக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மா... மேலும் பார்க்க