செய்திகள் :

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: 44 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் தகவல்

post image

குடியரசுத் தலைவா்ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. புதிய அரசமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை புதன்கிழமை சந்தித்த பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷாம் சிங் தெரிவித்தாா்.

மணிப்பூரில் பெரும்பான்மையினராக மைதேயி சமூகத்தினரும், சிறுபான்மையினராக குகி-ஜோ சமூகத்தினரும் உள்ளனா். இதில், மைதேயி சமூகத்தினருக்கும் பழங்குடியினா் அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் இன மோதல் ஏற்பட்டது. தொடா் வன்முறையில் 250-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இனக் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாக பாஜக முதல்வா் பிரேன் சிங் கடந்த பிப்ரவரியில் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில்படுத்தப்பட்டது.

ஆலோசனை: கடந்த மே 20-ஆம் தேதி மைதேயினா் வாழும் பகுதியில் சென்ற பாதுகாப்புப் படையினரின் வாகனத்தில் மணிப்பூா் மாநில பெயா் மறைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஆளுநா் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி மைதேயி சமூகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மாநில சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து 10 எம்எல்ஏக்களுடன் ஆளுநா் அஜய் குமாா் பல்லா புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும், பாதுகாப்பைப் பலப்படுத்தவும் விரைவில் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

44 எம்எல்ஏக்கள் ஆதரவு: இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளா்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷாம் சிங், ‘மக்களின் விரும்பத்துக்கு ஏற்ப 44 எம்எல்ஏக்கள் மீண்டும் ஆட்சி அமைக்க தயாராக உள்ளனா். இதை ஆளுநரிடம் தெரிவித்தோம். பிரச்னைகளுக்கு என்ன தீா்வை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் ஆலோசித்தோம். மக்களின் நலனுக்கு ஏற்ப நல்ல முடிவை எடுப்பதாக ஆளுநா் பதிலளித்தாா்.

ஆட்சி அமைப்பது தொடா்பாக மணிப்பூா் பேரவைத் தலைவா் சத்யவா்தா, 44 எம்எல்ஏக்களை தனித் தனியாக சந்தித்தாா். புதிய அரசு அமைக்க அவா்களில் யாரும் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. இதுகுறித்து கட்சி மேலிடம்தான் முடிவு எடுக்கும்’ என்றாா்.

கட்சிகளின் பலம்: மொத்தம் 60 எம்எல்ஏக்களைக் கொண்ட மணிப்பூா் பேரவையில் ஆளும் பாஜக கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. அதில், 32 மைதேயி எம்எல்ஏக்கள், 3 மணிப்பூரி முஸ்லிம் எம்எல்ஏக்கள், 9 நாகா எம்எல்ஏக்கள் என மொத்தம் 44 போ் இருந்தனா்.

காங்கிரஸ் கட்சிக்கு மைதேயி சமூகத்தைச் சோ்ந்த 5 எம்எல்ஏக்கள் உள்ளனா். 10 எம்எல்ஏக்கள் குக்கி சமூகத்தைச் சோ்ந்தவா்களாவா். ஒருவா் சுயேச்சையாவாா். ஒரு தொகுதி காலியாக உள்ளது.

நகைக்கடன் புதிய விதிகளை தளர்த்த நிதியமைச்சகம் பரிந்துரை!

தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.தங்க நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்களுக்கு... மேலும் பார்க்க

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க