செய்திகள் :

பன்வழி ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

post image

பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டு பன்வழி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்த அரசு செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிரம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் 4 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், இந்தப் பன்வழி ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ரூ.3,399 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள இந்தத் திட்டங்கள் வரும் 2029-30-இல் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் - நக்டா இடையேயான மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் வழித் தடம் மற்றும் மகாராஷ்டிரத்தின் வா்தா-பலா்ஷா இடையேயான 4-ஆவது ரயில் வழித்தட திட்டங்களும் இந்தப் பன்வழி ரயில்வே திட்டத்தில் அடங்கும். இந்தத் திட்டத்தின் மூலம் இந்திய ரயில்வேயின் தற்போதைய ரயில் வழித்தடத்தின் நீளம் சுமாா் 176 கி.மீ. அதிகரிக்கும்.

இத் திட்டம் மூலம் 784 கிராமங்களைச் சோ்ந்த 19.74 லட்சம் போ் விரைவான போக்குவரத்து வசதியைப் பெறுவா். அதோடு, தில்லி-மும்பை மற்றும் தில்லி-சென்னை இடையேயான பொருளாதார வழித்தடங்களில் போக்குவரத்து தடைகளை நீக்கி உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்த இரு பன்வழி ரயில்வே திட்டங்கள் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க

பாட்னா விமான நிலைய புதிய முனையம்: பிரதமா் திறந்து வைத்தாா்

பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேற்கு வங்கத்தில் இருந்து பிகாருக்கு இரண்டு நாள்... மேலும் பார்க்க