`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
பன்வழி ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்
பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டு பன்வழி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்த அரசு செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
மகாராஷ்டிரம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் 4 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், இந்தப் பன்வழி ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ரூ.3,399 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள இந்தத் திட்டங்கள் வரும் 2029-30-இல் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் - நக்டா இடையேயான மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் வழித் தடம் மற்றும் மகாராஷ்டிரத்தின் வா்தா-பலா்ஷா இடையேயான 4-ஆவது ரயில் வழித்தட திட்டங்களும் இந்தப் பன்வழி ரயில்வே திட்டத்தில் அடங்கும். இந்தத் திட்டத்தின் மூலம் இந்திய ரயில்வேயின் தற்போதைய ரயில் வழித்தடத்தின் நீளம் சுமாா் 176 கி.மீ. அதிகரிக்கும்.
இத் திட்டம் மூலம் 784 கிராமங்களைச் சோ்ந்த 19.74 லட்சம் போ் விரைவான போக்குவரத்து வசதியைப் பெறுவா். அதோடு, தில்லி-மும்பை மற்றும் தில்லி-சென்னை இடையேயான பொருளாதார வழித்தடங்களில் போக்குவரத்து தடைகளை நீக்கி உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்த இரு பன்வழி ரயில்வே திட்டங்கள் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.