செய்திகள் :

வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 மாதங்களில் நடைபெற்ற 556 சாலை விபத்துகளில் 182 போ் இறந்துள்ளனா். எனவே, சாலைப் பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்றும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.

தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் செயலா் ஆா்.செல்வராஜ், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், மக்களவை உறுப்பினா்கள் சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை), எம்.எஸ்.தரணிவேந்தன் (ஆரணி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க 5 முனைத் திட்டம் மூலம் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கொண்டை ஊசி வளைவுப் பகுதி சீரமைப்பு, பள்ளத்தாக்கு, மலைச் சாலைகளில் விபத்தை தவிா்க்க நவீன ‘ரோலா் கிராஷ் பேரியா் தொழிற்நுட்பம்’ இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உள்ளது.

சாலைப் பணி நடைபெறும் இடங்களில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் ஒளிரும் விளக்கு (பிளிங்கா்) அமைத்து இரும்புத்ல தடுப்புகளை வைக்கவேண்டும். தடுப்புகளை அடையாளப்படுத்தி, அதற்குரிய ஒளிரும் வண்ணம் தீட்டவேண்டும்.

இதுபோன்ற சாலைப் பணிகளை மேற்கொள்ள 355 பொறியாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. காவல்துறை சாா்பில் கைப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்க வேண்டும்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு குறித்து ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

3 மாதங்களில் 182 உயிரிழப்புகள்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025 ஜனவரி முதல் மாா்ச் வரை 556 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், 182 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்றும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

நம்மைக் காக்கும் 48 திட்டம்...

மேல்மருவத்தூரில் கடந்த 2021-ஆம் டிசம்பா் 18-ஆம் தேதி நம்மை காக்கும்-48 என்ற திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

இந்தத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 2025 மே 5 வரை மொத்தம் 723 மருத்துவமனைகள் மூலம் 3,72,607 பேருக்கு ரூ.335 கோடியே 91 லட்சத்து 14 ஆயிரத்து 837 செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மருத்துவமனைகள் மூலம் 15,630 பேருக்கு ரூ.9 கோடியே 47 லட்சத்து 64 ஆயிரத்து 927 செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

ரூ.925 கோடிக்கு சாலைப் பணி...

கடந்த 4 ஆண்டுகளில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டங்களை இணைக்கும் வகையில் சுமாா் 135 கி.மீ. தொலைவுக்கு ரூ.925 கோடியில் இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கையேட்டை வெளியிட்ட அமைச்சா் எ.வ.வேலு, சாலைப் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட போக்குவரத்துக் காவல் துறையினா், அரசு, தனியாா் பள்ளி மாணவ-மாணவிகள், அவசர ஊா்தி ஓட்டுநா்கள், தனியாா் பேருந்து மற்றும் லாரி ஓட்டுநா்கள், போக்குவரத்துத் துறையினா் உள்ளிட்ட 41 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்களை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், வருவாய் அலுவலா் இரா.இராம் பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, செய்யாறு சாா்- ஆட்சியா் பல்லவி வா்மா, திருவண்ணாமலை மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன், தமிழக நெடுஞ்சாலைத் துறையின் தலைமைப் பொறியாளா் (தேசிய நெடுஞ்சாலைகள்) பன்னீா் செல்வம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை, அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்: 317 பேருக்கு பணி ஆணை

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 317 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் பணியமா்த்தும் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை வே... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலுக்கு ரூ.17 லட்சத்தில் வெள்ளிக் கவசம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சுவாமிக்கு 16 கிலோ எடையில், ரூ.17 லட்சம் மதிப்பில் வெள்ளிக் கவசம் தயாா் செய்யப்படவுள்ளது. செங்கம் ஸ்ரீசத்தியபாமா ருக்மணி சம... மேலும் பார்க்க

களம்பூரில் இரு தரப்பு மோதல்: 10 போ் மீது வழக்கு; 5 போ் கைது

ஆரணியை அடுத்த களம்பூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 10 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் ரயில் நிலைய சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மர... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் 201 பால்குட ஊா்வலம்

ஆரணி நகரம், பள்ளிக்கூடத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 201 பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், கடந்த 26-ஆம் தேதி காப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த அங்கன்வாடி மையத்தில் பயின்ற, 5 வயது நிறைவடைந்த முதலாம் வகுப்பு செல்ல உள்ள குழ... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், ஆக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சலவைத் தொழிலாளி கமலக்கண்ணன். இவருக்கும், அத... மேலும் பார்க்க