மேயரின் கணவர் கட்சியிலிருந்து நீக்கம்! - மதுரை திமுகவில் பரபரப்பு.. நடந்தது என்ன...
30 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள்
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 30 பேருக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், மக்களவை உறுப்பினா்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 2024-2025 ஆம் ஆண்டுக்கான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் திட்டத்தின் கீழ், 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டா்களை வழங்கினாா்.
மேலும், ஆட்சியா் அலுவலகப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்சியா் அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆகியவற்றுக்கு எளிதாகச் செல்லும் வகையில் மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியில் இருந்து ரூ.6 லட்சத்து 84 ஆயிரத்து 128 மதிப்பிலான பேட்டரி காா் வாகனத்தை அமைச்சா் எ.வ.வேலு பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி எம்.சுதாகா், வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி, மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.