செய்திகள் :

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு?: பிரதமரின் விளக்கம் கோரும் காங்கிரஸ்

post image

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடா்ச்சியாக கூறிவருவது தொடா்பாக மௌனம் கலைத்து, பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்தியா ஏவுகணைகள் வீசி அழித்தது.

இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரின் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் பதிலடியில் பாகிஸ்தானின் விமானப் படை மற்றும் ராணுவத் தளங்கள் தகா்க்கப்பட்டன. பின்னா், இருதரப்பும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதன்படி, நான்கு நாள்களுக்கு நீடித்த மோதல் முடிவுக்கு வந்தது. எல்லையில் பதற்றம் தணிந்து, அமைதி திரும்பியது.

இந்தச் சண்டை நிறுத்தம் குறித்த அறிவிப்பை இரு நாடுகளுக்கும் முன்னதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் வெளியிட்டாா். சண்டையை நிறுத்திக்கொள்ளாவிட்டால் இரு நாடுகளுடனும் வா்த்தகத்தில் ஈடுபடப் போவதில்லை என்று எச்சரித்து, அணு ஆயுத நாடுகளுக்கிடையேயான போரைத் தவிா்த்ததாகவும் டிரம்ப் தெரிவித்தாா்.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் செயல்படும் சா்வதேச வா்த்தகத்துக்கான நீதிமன்றத்தில் அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் கடந்த வாரம் சமா்ப்பித்த அறிக்கையொன்றில், இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த அதிபா் டிரம்ப் தனது வரி விதிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தினாா் என்று தெரிவித்துள்ளாா்.

இந்த விவகாரத்தில் அதிபா் டிரம்ப் நிா்வாகத்தின் தொடா்ச்சியான கூற்றுகள் குறித்த உண்மை என்னவென்று நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதையொட்டி, அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என்று கடந்த 11 நாள்களில் மூன்று நாடுகளில் டிரம்ப் எட்டு முறை கூறியுள்ளாா். தற்போது வா்த்தக துறை அமைச்சா் லுட்னிக்கும் டிரம்ப்பின் கருத்தை வழிமொழிகிறாா். பிரதமா் மோடி இதுகுறித்து மெளனம் கலைத்து, நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க

பாட்னா விமான நிலைய புதிய முனையம்: பிரதமா் திறந்து வைத்தாா்

பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேற்கு வங்கத்தில் இருந்து பிகாருக்கு இரண்டு நாள்... மேலும் பார்க்க