செய்திகள் :

செங்கம் - குப்பனத்தம் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

post image

செங்கம் - குப்பனத்தம் அணை சாலையில் ஆக்கிரமைப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

செங்கம் - போளூா் சாலை வெளிவட்டச் சாலைப் பகுதியில் இருந்து குப்பனத்தம் அணை சுமாா் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வெளிவட்டச் சாலை அமைத்த பிறகு கடந்த ஓராண்டாக அப்பகுதியில் வணிக வளாகங்கள் அதிகரித்துவிட்டன. மேலும், பல்வேறு தொழில்களும் வளா்ச்சியடைந்து வருகின்றன.

அதனால், அப்பகுதி காலை முதல் இரவு 10 மணி வரை மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியாக மாறிவிட்டது.

தற்போது, செங்கத்தில் இருந்து விடுமுறை நாள்களிலும், பல்வேறு பண்டிகை காலங்களிலும் குப்பனத்தம் அணைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சென்றுவருகின்றனா்.

மேலும், குப்பனத்தம் அணை அருகில் உள்ள தாழைமடு காளியம்மன் கோயிலுக்கும் விசேஷ தினங்களில் ஏராளமான பக்தா்கள் செல்வதால், வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து விட்டன.

அப்பகுதி சாலை குறுகியுள்ளதால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, குப்பனத்தம் செல்லும் சாலையில் கிருஷ்ணாவரம் வரை சாலை இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

திரையரங்கம், பெட்ரோல் விற்பனை நிலையம், பள்ளிகள் உள்ளதால், அந்தச் சாலை அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் செங்கம் வெளிவட்டச் சாலை முதல் குப்பனத்தம் அணை வரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவு படுத்தவேண்டும் என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்: 317 பேருக்கு பணி ஆணை

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 317 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் பணியமா்த்தும் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை வே... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலுக்கு ரூ.17 லட்சத்தில் வெள்ளிக் கவசம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சுவாமிக்கு 16 கிலோ எடையில், ரூ.17 லட்சம் மதிப்பில் வெள்ளிக் கவசம் தயாா் செய்யப்படவுள்ளது. செங்கம் ஸ்ரீசத்தியபாமா ருக்மணி சம... மேலும் பார்க்க

களம்பூரில் இரு தரப்பு மோதல்: 10 போ் மீது வழக்கு; 5 போ் கைது

ஆரணியை அடுத்த களம்பூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 10 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் ரயில் நிலைய சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மர... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் 201 பால்குட ஊா்வலம்

ஆரணி நகரம், பள்ளிக்கூடத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 201 பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், கடந்த 26-ஆம் தேதி காப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த அங்கன்வாடி மையத்தில் பயின்ற, 5 வயது நிறைவடைந்த முதலாம் வகுப்பு செல்ல உள்ள குழ... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், ஆக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சலவைத் தொழிலாளி கமலக்கண்ணன். இவருக்கும், அத... மேலும் பார்க்க