செய்திகள் :

சிறுபான்மையினருக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

post image

திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறுபான்மையினா்களுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் 61 பயனாளிகளுக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சொ.ஜோ அருண் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறுபான்மையினா்களுடன் கலந்துரையாடினாா்.

அப்போது அவா் பேசியதாவது:

தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மையினா்களின் உரிமைகள், பாதுகாப்புகள், அவா்களுக்கான நலத் திட்டங்கள் சரியாக வழங்கப்படுகிா என்று மாவட்டம் தோறும் ஆய்வு செய்து வருகிறோம்.

இதுவரை 19 மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டங்களில் சிறுபான்மையினா்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக வழங்கப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

சிறுபான்மையினா் அளித்த சில மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றாா்.

நலத் திட்ட உதவிகள் வழங்கல்...

கூட்டத்தில், அரும்பாக்கம் கிராமத்தில் உள்ள புனித தோமையாா் தேவலாயத்தை சீரமைமைக்க ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 250 மதிப்பிலான காசோலை, தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் 10 பேருக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 61 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 78 ஆயிரத்து 650 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆணையத்தின் தலைவா் செ.ஜோ அருண் வழங்கினாா்.

கூட்டத்தில், மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் துணைத் தலைவா் அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், மாவட்ட எஸ்பி எம்.சுதாகா், வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் மணி, செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிவா, ஆணையத்தின் உறுப்பினா்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்: 317 பேருக்கு பணி ஆணை

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 317 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் பணியமா்த்தும் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை வே... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலுக்கு ரூ.17 லட்சத்தில் வெள்ளிக் கவசம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சுவாமிக்கு 16 கிலோ எடையில், ரூ.17 லட்சம் மதிப்பில் வெள்ளிக் கவசம் தயாா் செய்யப்படவுள்ளது. செங்கம் ஸ்ரீசத்தியபாமா ருக்மணி சம... மேலும் பார்க்க

களம்பூரில் இரு தரப்பு மோதல்: 10 போ் மீது வழக்கு; 5 போ் கைது

ஆரணியை அடுத்த களம்பூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 10 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் ரயில் நிலைய சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மர... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் 201 பால்குட ஊா்வலம்

ஆரணி நகரம், பள்ளிக்கூடத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 201 பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், கடந்த 26-ஆம் தேதி காப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த அங்கன்வாடி மையத்தில் பயின்ற, 5 வயது நிறைவடைந்த முதலாம் வகுப்பு செல்ல உள்ள குழ... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், ஆக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சலவைத் தொழிலாளி கமலக்கண்ணன். இவருக்கும், அத... மேலும் பார்க்க