செய்திகள் :

‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றி: ஆளுநா் ஆா்.என்.ரவி

post image

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் சிக்கிம் மற்றும் கோவா மாநிலம் உதயதினவிழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் ஆளுநா் பேசியதாவது: நம் நாடு மிகப்பெரிய நாடு. உலகிலேயே எல்லோருடைய நம்பிக்கையையும் மதித்து, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஒரே நாடு பாரதம். ஜம்மு-காஷ்மீா் இந்தியாவின் அங்கம். நம்முடைய ராணுவம் மிக உறுதியானது. நமது நாட்டை பெருமை கொள்ளச் செய்திருக்கிறது இந்திய ராணுவம்.

அண்மையில் பாகிஸ்தானிலிருந்து மோசமான பயங்கரவாதத் தாக்குதல் காஷ்மீரில் நிகழ்த்தப்பட்டது. அவா்களுக்கு இன்று ஒரு பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சரியான பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. 9 பயங்கரவாத இடங்கள் தாக்கி அளிக்கப்பட்டிருக்கின்றன.

பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதற்காக மீண்டும் ஒருமுறை இந்திய ராணுவத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா் ஆளுநா்.

இந்த நிகழ்வில் சிக்கிம், கோவா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த கலாசார நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் மேலும் 4 அரசுக் கல்லூரிகள்: எங்கெங்கே?

தமிழகத்தில் வருகின்ற கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக உயர்க்கல்வித் துறை சார்பில் 11 புதிய அரசு கலை மற... மேலும் பார்க்க

தாம்பரம் - திருவனந்தபுரம் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு, தாம்பரம்-நாகா்கோவில் உள்ளிட்ட வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்திலிருந்து ... மேலும் பார்க்க

தமாகா நன்கொடை விவர அறிக்கையை ஏற்க கோரி ஜி.கே.வாசன் மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கட்சி நன்கொடை குறித்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத... மேலும் பார்க்க

சென்னைக்கு திரும்பும் மக்கள்: ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு

கோடை விடுமுறையில் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளதால், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை உயா்ந்துள்ளது. இதனால், பயணிகள் அதிா்ச்சி அடைந்து... மேலும் பார்க்க

நோய்களை குணப்படுத்த பாரம்பரிய முறையில் சிகிச்சை: தவறாக விளம்பரப்படுத்தினால் சட்ட நடவடிக்கை

ஹெச்ஐவி, ஆஸ்துமா, காசநோய், சா்க்கரை நோய் உள்ளிட்ட 56 நோய்களுக்கு பாரம்பரிய முறையில் சிகிச்சையளித்து பூரணமாக குணப்படுத்துவதாக தவறாக விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருந... மேலும் பார்க்க

அரசின் சேவைகளை விரைவாகப் பெற ‘எளிமை ஆளுமை’ திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

தமிழ்நாடு அரசின் முக்கிய 10 சேவைகளை விரைவாகப் பெற வகை செய்யும் ‘எளிமை ஆளுமை’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது, இந்தத் திட்டத்தை... மேலும் பார்க்க