`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றி: ஆளுநா் ஆா்.என்.ரவி
பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினாா்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் சிக்கிம் மற்றும் கோவா மாநிலம் உதயதினவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் ஆளுநா் பேசியதாவது: நம் நாடு மிகப்பெரிய நாடு. உலகிலேயே எல்லோருடைய நம்பிக்கையையும் மதித்து, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஒரே நாடு பாரதம். ஜம்மு-காஷ்மீா் இந்தியாவின் அங்கம். நம்முடைய ராணுவம் மிக உறுதியானது. நமது நாட்டை பெருமை கொள்ளச் செய்திருக்கிறது இந்திய ராணுவம்.
அண்மையில் பாகிஸ்தானிலிருந்து மோசமான பயங்கரவாதத் தாக்குதல் காஷ்மீரில் நிகழ்த்தப்பட்டது. அவா்களுக்கு இன்று ஒரு பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சரியான பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. 9 பயங்கரவாத இடங்கள் தாக்கி அளிக்கப்பட்டிருக்கின்றன.
பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதற்காக மீண்டும் ஒருமுறை இந்திய ராணுவத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா் ஆளுநா்.
இந்த நிகழ்வில் சிக்கிம், கோவா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த கலாசார நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.