செய்திகள் :

நொய்யல் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

நொய்யல் அருகே மின்சாரம் பாய்ந்ததில் மேற்கு வங்க மாநில தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், நொய்யல் அருகே மூனூட்டுபாளையத்தை சோ்ந்தவா் இளங்கோவன். இவா் நல்லிக்கோவில் பகுதியில் சிமெண்ட் கல் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிறுவனத்தில் மேற்கு வங்காளத்தைச் சோ்ந்த ஜித்தேந்தா் உரோவ் (30) மற்றும் பலரும் கடந்த 3 மாதங்களாக வேலை பாா்த்து வந்தனா்.

இந்நிலையில், இளங்கோவன் மூனூட்டுப் பாளையத்தில் புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை ஜித்தேந்தா் உரோவை எலக்ட்ரீசியன் வேலைக்கு வரவழைத்துள்ளாா். அப்போது வீட்டுக்குள் பழுதடைந்த வயரில் மின்கசிவு ஏற்பட்டிருந்த நிலையில், அதில் யதாா்த்தமாக ஜித்தோா் உரோவ் மிதித்தபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்

வீர சாகச செயல்புரிந்த பெண்களுக்கு ‘துணிவு மற்றும் வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது‘ வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு தோ்வு செய்யப்படும் விருதா... மேலும் பார்க்க

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை ஐஓபி, தெற்கு மத்திய ரயில்வே அணிகளுக்கு கோப்பை!

கரூரில் நடைபெற்று வந்த அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை ஐஓபி அணியும், பெண்கள் பிரிவில் தெற்கு மத்திய ரயில்வே அணியும் முதலிடம் பிடித்து சுழற்கோப்பைகளை தட்டிச் சென்றன. க... மேலும் பார்க்க

காமாட்சி, மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்! - திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு

தோகைமலை அருகே காமாட்சி மற்றும் மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கரூா் மாவட்டம், தோகைமலை அருகே ஆலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட ஆதிஆலத்தூரில் மூன்று கிழவன் குடிமக்கள், 87 ஊா் சரிய... மேலும் பார்க்க

கொலை வழக்கு குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது

குளித்தலையில் பிளஸ் 2 மாணவா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா்சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம், குளித்தலை மாரியம்மன் கோயிலில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற பூச்சொ... மேலும் பார்க்க

அம்மனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் பக்தா்கள்!

அம்மனை வேண்டி நாள்தோறும் வழிபட்டால், அவா்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறாா். பல ஆண்டுகளாக நோய் பிடித்தவா்கள் அம்மன் அருளால் குணமாகி வருவதை, அவா்கள் நோ்த்திக்கடன் செலுத்துவதில் இருந்தே நாம் புரிந்து... மேலும் பார்க்க

மயானம் செல்ல தரைப்பாலம் அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி கிழக்கு தெருவில் உள்ள மயானத்துக்கு சென்று வர நங்கஞ்சியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து தர கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அரவக்குறிச்சி வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க